• May 05 2026

கொடிகாமத்தில் மின்கம்பத்துடன் மோதிய கார் - தடைப்பட்ட மின்சாரம்

Chithra / Feb 23rd 2026, 8:53 am
image

யாழ்ப்பாணம் - தென்மராட்சி கொடிகாமம் பருத்தித்துறை வீதியில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


இந்த இந்த விபத்து நேற்று இரவு 9.15 மணியளவில் கொடிகாமம் பருத்தித்துறை வீதியில் எருவன் பிள்ளையார் வளைவுப் பகுதியில் சம்பவித்துள்ளது.


மகிழுந்து ஒன்று கொடிகாமத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த வேளையில் எருவன் பிள்ளையார் கோவில் பகுதியில் மின்கம்பத்துடன் மோதியே இவ்விபத்து சம்பவித்துள்ளது.


இந்த சம்பவத்தில் மகிழுந்து சேதத்துக்குள்ளாகியுள்ள நிலையிலும் பயணித்த எவருக்கும் தெய்வாதீனமாக எந்தவித ஆபத்துக்களும் ஏற்படவில்லை .


மின்கம்பத்துடன் மோதி விபத்து ஏற்பட்டதால் மின்கம்பம் சேதமடைந்த நிலையில் வரணிப்பகுதிக்கான மின்சாரம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது


சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர்

கொடிகாமத்தில் மின்கம்பத்துடன் மோதிய கார் - தடைப்பட்ட மின்சாரம் யாழ்ப்பாணம் - தென்மராட்சி கொடிகாமம் பருத்தித்துறை வீதியில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த இந்த விபத்து நேற்று இரவு 9.15 மணியளவில் கொடிகாமம் பருத்தித்துறை வீதியில் எருவன் பிள்ளையார் வளைவுப் பகுதியில் சம்பவித்துள்ளது.மகிழுந்து ஒன்று கொடிகாமத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த வேளையில் எருவன் பிள்ளையார் கோவில் பகுதியில் மின்கம்பத்துடன் மோதியே இவ்விபத்து சம்பவித்துள்ளது.இந்த சம்பவத்தில் மகிழுந்து சேதத்துக்குள்ளாகியுள்ள நிலையிலும் பயணித்த எவருக்கும் தெய்வாதீனமாக எந்தவித ஆபத்துக்களும் ஏற்படவில்லை .மின்கம்பத்துடன் மோதி விபத்து ஏற்பட்டதால் மின்கம்பம் சேதமடைந்த நிலையில் வரணிப்பகுதிக்கான மின்சாரம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதுசம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement