• Jul 08 2026

சந்நிதியான் ஆச்சிரமத்தால் கதிர்காம பாத யாத்திரையினர்க்கு அம்பாறையில் உதவிகள்!

shanu / Jul 7th 2026, 9:50 pm
image

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் சந்நிதியிலிருந்து கதிர்காமத்திற்கு  44 நாளாக பாத யாத்திரையில் ஈடுபடும் அடியவர்களுக்கு அம்பாறை  பணமை  பகுதியில் வைத்து 150,000 ரூபா பெறுமதியான 120 உணவுப் பொதிகள் 10 ம் கட்டமாக, இன்றையத்தினம் வழங்கி வைக்கப்பட்டன. 


குமண தேசிய பூங்கா ஊடாக செல்லும் கதிர்  காமம் பாத யாத்திரையினர்க்கு திறக்கப்பட்ட பாதை மூடப்படும் வரை குடிநீர் வழங்குவதற்கு 6 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டு  தண்ணீர் வழங்க தொண்டர்  அணியினர்  தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலயத்தில் வைத்து வெட்டிகள் வழங்கப்பட்டு பிற்பகல் 5.15 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத்தமிழன் செ.மோகனதாஸ் சுவாமிகள் அவர்களால் தண்ணீர் வழங்கல்  ஆரம்பித்து வைத்ததுடன்  தொண்டர்களுக்கான ஒரு தொகை நிதியும் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் நேரடியாக சென்று வழங்கிவைத்தார். 


குமண தேசிய பூங்கா (Kumana National Park) மற்றும் யால தேசிய பூங்கா வழி 10/07/2026 ந்திகதி திறக்கப்படவுள்ள நிலையில், சவாலான மற்றும் ஆன்மீக ரீதியில் தனித்துவம் வாய்ந்த பகுதியான குமண தேசிய பூங்கா (Kumana National Park) மற்றும் யால தேசிய பூங்கா வழியாக கதிர்காமத்தை அடைய சுமார் 70 முதல் 90 கிலோமீட்டர் தூரம் வரை அடர்ந்த காடுகளிலும், மணல் பரப்புகளிலும், வனப்பகுதி ஊடகவும்  பயணத்தைக் கடக்கப் பக்தர்களுக்கு பொதுவாக 4 முதல் 6 நாட்கள் வரை ஆகும். இப்  பகுதி மிகவும் ஆபத்தாணத்தாகும்.


இதேவேளை சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாரந்தம் வெள்ளிக்கிழமைகளில் இடம்பெறும் நிகழ்வில் கடந்த வெள்ளிக்கிழமை  “கந்தபுராணம் காக்கும் கலாசாரம் ” என்னும் ஆன்மீகஅருளுரையினை, சைவப்புலவர் த S.K.N தவராஜா அவர்கள் நிகழ்த்தினார்கள்.


இந் நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், சந்நிதியான் அச்சிரம தொண்டர்கள் அடியவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

சந்நிதியான் ஆச்சிரமத்தால் கதிர்காம பாத யாத்திரையினர்க்கு அம்பாறையில் உதவிகள் யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் சந்நிதியிலிருந்து கதிர்காமத்திற்கு  44 நாளாக பாத யாத்திரையில் ஈடுபடும் அடியவர்களுக்கு அம்பாறை  பணமை  பகுதியில் வைத்து 150,000 ரூபா பெறுமதியான 120 உணவுப் பொதிகள் 10 ம் கட்டமாக, இன்றையத்தினம் வழங்கி வைக்கப்பட்டன. குமண தேசிய பூங்கா ஊடாக செல்லும் கதிர்  காமம் பாத யாத்திரையினர்க்கு திறக்கப்பட்ட பாதை மூடப்படும் வரை குடிநீர் வழங்குவதற்கு 6 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டு  தண்ணீர் வழங்க தொண்டர்  அணியினர்  தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலயத்தில் வைத்து வெட்டிகள் வழங்கப்பட்டு பிற்பகல் 5.15 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத்தமிழன் செ.மோகனதாஸ் சுவாமிகள் அவர்களால் தண்ணீர் வழங்கல்  ஆரம்பித்து வைத்ததுடன்  தொண்டர்களுக்கான ஒரு தொகை நிதியும் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் நேரடியாக சென்று வழங்கிவைத்தார். குமண தேசிய பூங்கா (Kumana National Park) மற்றும் யால தேசிய பூங்கா வழி 10/07/2026 ந்திகதி திறக்கப்படவுள்ள நிலையில், சவாலான மற்றும் ஆன்மீக ரீதியில் தனித்துவம் வாய்ந்த பகுதியான குமண தேசிய பூங்கா (Kumana National Park) மற்றும் யால தேசிய பூங்கா வழியாக கதிர்காமத்தை அடைய சுமார் 70 முதல் 90 கிலோமீட்டர் தூரம் வரை அடர்ந்த காடுகளிலும், மணல் பரப்புகளிலும், வனப்பகுதி ஊடகவும்  பயணத்தைக் கடக்கப் பக்தர்களுக்கு பொதுவாக 4 முதல் 6 நாட்கள் வரை ஆகும். இப்  பகுதி மிகவும் ஆபத்தாணத்தாகும்.இதேவேளை சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாரந்தம் வெள்ளிக்கிழமைகளில் இடம்பெறும் நிகழ்வில் கடந்த வெள்ளிக்கிழமை  “கந்தபுராணம் காக்கும் கலாசாரம் ” என்னும் ஆன்மீகஅருளுரையினை, சைவப்புலவர் த S.K.N தவராஜா அவர்கள் நிகழ்த்தினார்கள்.இந் நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், சந்நிதியான் அச்சிரம தொண்டர்கள் அடியவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். 

Advertisement

Advertisement

Advertisement