ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் ஒட்டுமொத்தப் பொதுமக்களையும் உறைய வைத்துள்ள ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் தற்கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
பெங்களூரில் உள்ள ஒரு முன்னணி ஐ.டி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராகப் பணியாற்றி வந்த 25 வயது இளம்பெண் ஒருவர், நள்ளிரவில் நிர்வாணமாகத் தெருக்களில் சுற்றித் திரிந்து, பின்னர் கோவிலுக்குள் புகுந்து அம்மன் சிலையோடு குளத்தில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஒரு மென்பொருள் பொறியாளருக்கு நேர்ந்த இந்தத் துயரத்தின் பின்னணி என்ன? காவல்துறையின் புலனாய்வில் தெரியவந்துள்ள திடுக்கிடும் தகவல்களை இப்போது விரிவாகப் பார்க்கலாம்
விஜயநகரம் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான தேஜஸ்வினி என்ற அந்த இளம்பெண், பெங்களூரில் சாப்ட்வேர் இன்ஜினியராகப் பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் இவர், ஆறு மாதங்களுக்கு முன்பு தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் பீரபஜிகுடா பகுதியில் தனது தாயாருடன் ஒரு வாடகை வீட்டில் தேஜஸ்வினி குடியேறியுள்ளார்.
கடந்த 17-ஆம் தேதி இரவு, வழக்கம்போலத் தாயுடன் தூங்கச் சென்ற தேஜஸ்வினி, நள்ளிரவு 2:30 மணியளவில் திடீரென எழுந்துள்ளார். யாரும் எதிர்பாராத விதமாகத் தனது தாயின் அறைக்கதவை வெளிப்பக்கமாகப் பூட்டிய அவர், கையில் ஒரு புடவையை மட்டும் எடுத்துக்கொண்டு, ஆடைகளின்றி நிர்வாணமாக வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
நள்ளிரவு நேரத்தில் நிர்வாணமாகத் தெருக்களில் ஓடிய தேஜஸ்வினி, அங்கிருந்த 'பீரம்மா' கோவிலுக்குள் நுழைந்துள்ளார். அங்கிருந்த அம்மன் சிலையைக் கைகளில் அள்ளிக்கொண்டு, நேராகக் கோவில் அருகே இருந்த குளத்தை நோக்கி ஓடியுள்ளார். சுற்றும் முற்றும் பாராமல், கையில் இருந்த அம்மன் சிலையோடு அந்த ஆழமான குளத்திற்குள் குதித்துத் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
மறுநாள் காலை, விடிந்ததும் தனது அறைக்கதவு வெளிப்பக்கமாகப் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தேஜஸ்வினியின் தாய், சத்தமிட்டு அலறியுள்ளார்.
அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து கதவைத் திறந்து அவரை மீட்டனர். வீட்டில் தேஜஸ்வினி இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து தேடியபோதுதான், கோவில் குளத்தில் அவரது உடல் மிதப்பது கண்டறியப்பட்டது.
தொகுப்பாளர்: சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர், தேஜஸ்வினியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், இந்த வழக்கில் தற்பொழுது ஒரு புதிய சிக்கல் எழுந்துள்ளது.
தேஜஸ்வினி தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு கோவிலிலிருந்து எடுத்துச் சென்ற அந்தப் புனிதமான அம்மன் சிலை தற்பொழுது குளத்தில் காணவில்லை.
இந்த வழக்கின் மிக முக்கிய ஆதாரமாகக் கருதப்படுவதால், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் ஒட்டுமொத்தக் குளத்தையும் சல்லடை போட்டு அந்தச் சிலையைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நன்கு படித்து, பெங்களூரில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றிய ஒரு இளம்பெண், மனநலப் பாதிப்பால் இப்படி ஒரு விபரீத முடிவைத் தேடிக்கொண்டது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனநலப் பாதிப்புகள் ஏற்படும்போது உற்றார் உறவினர்கள் அவர்களுக்கு அளிக்கும் அரவணைப்பும், முறையான மருத்துவ சிகிச்சையுமே இதுபோன்ற விபரீதங்களைத் தடுக்கும் எனச் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஆந்திராவை உலுக்கியுள்ள இந்தச் சம்பவத்தின் அடுத்தகட்ட திருப்பங்களை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
00000000000000000000000000000
நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய பெண் கோவில் சிலையுடன் குளத்தில் குதித்த பிண்ணனி ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் ஒட்டுமொத்தப் பொதுமக்களையும் உறைய வைத்துள்ள ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் தற்கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது.பெங்களூரில் உள்ள ஒரு முன்னணி ஐ.டி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராகப் பணியாற்றி வந்த 25 வயது இளம்பெண் ஒருவர், நள்ளிரவில் நிர்வாணமாகத் தெருக்களில் சுற்றித் திரிந்து, பின்னர் கோவிலுக்குள் புகுந்து அம்மன் சிலையோடு குளத்தில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஒரு மென்பொருள் பொறியாளருக்கு நேர்ந்த இந்தத் துயரத்தின் பின்னணி என்ன காவல்துறையின் புலனாய்வில் தெரியவந்துள்ள திடுக்கிடும் தகவல்களை இப்போது விரிவாகப் பார்க்கலாம்விஜயநகரம் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான தேஜஸ்வினி என்ற அந்த இளம்பெண், பெங்களூரில் சாப்ட்வேர் இன்ஜினியராகப் பணியாற்றி வந்துள்ளார்.கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் இவர், ஆறு மாதங்களுக்கு முன்பு தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.இதனைத் தொடர்ந்து, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் பீரபஜிகுடா பகுதியில் தனது தாயாருடன் ஒரு வாடகை வீட்டில் தேஜஸ்வினி குடியேறியுள்ளார். கடந்த 17-ஆம் தேதி இரவு, வழக்கம்போலத் தாயுடன் தூங்கச் சென்ற தேஜஸ்வினி, நள்ளிரவு 2:30 மணியளவில் திடீரென எழுந்துள்ளார். யாரும் எதிர்பாராத விதமாகத் தனது தாயின் அறைக்கதவை வெளிப்பக்கமாகப் பூட்டிய அவர், கையில் ஒரு புடவையை மட்டும் எடுத்துக்கொண்டு, ஆடைகளின்றி நிர்வாணமாக வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.நள்ளிரவு நேரத்தில் நிர்வாணமாகத் தெருக்களில் ஓடிய தேஜஸ்வினி, அங்கிருந்த 'பீரம்மா' கோவிலுக்குள் நுழைந்துள்ளார். அங்கிருந்த அம்மன் சிலையைக் கைகளில் அள்ளிக்கொண்டு, நேராகக் கோவில் அருகே இருந்த குளத்தை நோக்கி ஓடியுள்ளார். சுற்றும் முற்றும் பாராமல், கையில் இருந்த அம்மன் சிலையோடு அந்த ஆழமான குளத்திற்குள் குதித்துத் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.மறுநாள் காலை, விடிந்ததும் தனது அறைக்கதவு வெளிப்பக்கமாகப் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தேஜஸ்வினியின் தாய், சத்தமிட்டு அலறியுள்ளார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து கதவைத் திறந்து அவரை மீட்டனர். வீட்டில் தேஜஸ்வினி இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து தேடியபோதுதான், கோவில் குளத்தில் அவரது உடல் மிதப்பது கண்டறியப்பட்டது.தொகுப்பாளர்: சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர், தேஜஸ்வினியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், இந்த வழக்கில் தற்பொழுது ஒரு புதிய சிக்கல் எழுந்துள்ளது.தேஜஸ்வினி தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு கோவிலிலிருந்து எடுத்துச் சென்ற அந்தப் புனிதமான அம்மன் சிலை தற்பொழுது குளத்தில் காணவில்லை. இந்த வழக்கின் மிக முக்கிய ஆதாரமாகக் கருதப்படுவதால், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் ஒட்டுமொத்தக் குளத்தையும் சல்லடை போட்டு அந்தச் சிலையைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.நன்கு படித்து, பெங்களூரில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றிய ஒரு இளம்பெண், மனநலப் பாதிப்பால் இப்படி ஒரு விபரீத முடிவைத் தேடிக்கொண்டது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மனநலப் பாதிப்புகள் ஏற்படும்போது உற்றார் உறவினர்கள் அவர்களுக்கு அளிக்கும் அரவணைப்பும், முறையான மருத்துவ சிகிச்சையுமே இதுபோன்ற விபரீதங்களைத் தடுக்கும் எனச் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.ஆந்திராவை உலுக்கியுள்ள இந்தச் சம்பவத்தின் அடுத்தகட்ட திருப்பங்களை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.00000000000000000000000000000