• Apr 21 2026

காரில் கடத்தப்பட்ட மான், குளுமாட்டு இறைச்சிகளுடன் இருவர் கைது!

Chithra / Mar 15th 2026, 1:24 pm
image

 

பொத்துவில் பிரதேசத்தில் பானமை சாஸ்திரவேல பகுதியில் கார் ஒன்றில் மான் மற்றும் குளுமாட்டு இறைச்சிகளை கடத்திய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பானமை வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகம் மற்றும் குமண தேசிய பூங்காவின் வனவிலங்கு அதிகாரிகள், சாஸ்திரவேல விசேட அதிரடிப்படை அதிகாரிகளுடன் இணைந்து நேற்று (14) மேற்கொண்ட சோதனையின் போது, 70 கிலோ கிராம் காட்டெருமை (குளுமாடு) மற்றும் மான் இறைச்சிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.


இதன்போது இறைச்சியை எடைபோடப் பயன்படுத்திய தராசு ஒன்றும், கடத்தலுக்குப் பயன்படுத்திய காரும் கைப்பற்றப்பட்டன.


அத்துடன் படகுகள் மூலம் சென்று வேட்டையாடி, இறைச்சியை விற்பனை செய்து வந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நேற்று ( 14) பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.


காரில் கடத்தப்பட்ட மான், குளுமாட்டு இறைச்சிகளுடன் இருவர் கைது  பொத்துவில் பிரதேசத்தில் பானமை சாஸ்திரவேல பகுதியில் கார் ஒன்றில் மான் மற்றும் குளுமாட்டு இறைச்சிகளை கடத்திய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.பானமை வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகம் மற்றும் குமண தேசிய பூங்காவின் வனவிலங்கு அதிகாரிகள், சாஸ்திரவேல விசேட அதிரடிப்படை அதிகாரிகளுடன் இணைந்து நேற்று (14) மேற்கொண்ட சோதனையின் போது, 70 கிலோ கிராம் காட்டெருமை (குளுமாடு) மற்றும் மான் இறைச்சிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.இதன்போது இறைச்சியை எடைபோடப் பயன்படுத்திய தராசு ஒன்றும், கடத்தலுக்குப் பயன்படுத்திய காரும் கைப்பற்றப்பட்டன.அத்துடன் படகுகள் மூலம் சென்று வேட்டையாடி, இறைச்சியை விற்பனை செய்து வந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நேற்று ( 14) பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement