• May 30 2026

சட்டவிரோத சிகரெட் தொகையுடன் 18 பேர் கைது!

shanu / May 30th 2026, 2:55 pm
image

சட்டவிரோதமான முறையில் 31,380,000 ரூபா  பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டு வந்த 18 சீன மற்றும் இலங்கை பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 


டுபாய் மற்றும் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து இன்று (30) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்த குறித்த சந்தேகநபர்கள், பசுமை வழிப்பாதை ஊடாக சிகரெட்டுகளைக் கொண்டு செல்ல முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளனர். 


கைது செய்யப்பட்டவர்களில் 16 சீனப் பிரஜைகளும் இரண்டு இலங்கை பிரஜைகளும் அடங்குவதோடு, இவர்கள் அனைவரும் வர்த்தகர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. 


சந்தேகநபர்களிடம் இருந்த 27 பயணப் பொதிகளை சோதனையிட்டதில், சீனாவில் தயாரிக்கப்பட்ட 209,200 சிகரெட்டுகள் அடங்கிய 1,046 பெட்டிகள், விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 


சம்பவம் குறித்து விமான நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


சட்டவிரோத சிகரெட் தொகையுடன் 18 பேர் கைது சட்டவிரோதமான முறையில் 31,380,000 ரூபா  பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டு வந்த 18 சீன மற்றும் இலங்கை பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். டுபாய் மற்றும் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து இன்று (30) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்த குறித்த சந்தேகநபர்கள், பசுமை வழிப்பாதை ஊடாக சிகரெட்டுகளைக் கொண்டு செல்ல முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 16 சீனப் பிரஜைகளும் இரண்டு இலங்கை பிரஜைகளும் அடங்குவதோடு, இவர்கள் அனைவரும் வர்த்தகர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர்களிடம் இருந்த 27 பயணப் பொதிகளை சோதனையிட்டதில், சீனாவில் தயாரிக்கப்பட்ட 209,200 சிகரெட்டுகள் அடங்கிய 1,046 பெட்டிகள், விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் குறித்து விமான நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement