• May 15 2026

சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 14 வெளிநாட்டவர்கள் கைது

dorin / May 15th 2026, 7:19 pm
image

களுத்துறை வடக்கு, வஸ்கடுவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 14 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் செல்லுபடியாகும் விசா இன்றி தங்கியிருந்த 10 சீன நாட்டு ஆண்கள், ஒரு மலேசிய நாட்டு ஆண், இரண்டு சீன நாட்டுப் பெண்கள் மற்றும் ஒரு மலேசிய நாட்டுப் பெண் ஆகியோர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவர்கள் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், குறித்த ஹோட்டலினுள் பாரிய அளவிலான கணினி குற்றச்செயல்களை முன்னெடுப்பதற்கான பிரதான மத்திய நிலையம் ஒன்றின் ஆரம்பக்கட்ட நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தமை கண்டறியப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும், ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, தனியார் வணிகம் என்ற பெயரில் பதிவு செய்து இந்த மோசடியை முன்னெடுக்கத் திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 14 வெளிநாட்டவர்கள் கைது களுத்துறை வடக்கு, வஸ்கடுவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 14 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் செல்லுபடியாகும் விசா இன்றி தங்கியிருந்த 10 சீன நாட்டு ஆண்கள், ஒரு மலேசிய நாட்டு ஆண், இரண்டு சீன நாட்டுப் பெண்கள் மற்றும் ஒரு மலேசிய நாட்டுப் பெண் ஆகியோர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், குறித்த ஹோட்டலினுள் பாரிய அளவிலான கணினி குற்றச்செயல்களை முன்னெடுப்பதற்கான பிரதான மத்திய நிலையம் ஒன்றின் ஆரம்பக்கட்ட நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தமை கண்டறியப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, தனியார் வணிகம் என்ற பெயரில் பதிவு செய்து இந்த மோசடியை முன்னெடுக்கத் திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement