• Apr 21 2026

நண்பர்களுடன் நீராடிய இளைஞன் உயிரிழப்பு - முல்லைத்தீவில் துயரச் சம்பவம்

Chithra / Apr 21st 2026, 11:55 am
image

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கள்ளியடி பகுதியில் உள்ள பேராற்றில் நண்பர்களுடன் நீராடிய இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.


இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது.


புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 20 வயது இளைஞனே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்தவரின் உடலம் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாயில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.


இலங்கையில் வெயில் காலங்களில் நீர்நிலைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் ஒரு பாரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளன. குறிப்பாக விடுமுறை காலங்களிலும், வறட்சியான காலநிலையிலும் இவ்வாறான அனர்த்தங்கள் அதிகம் நிகழ்கின்றன.


அதிக வெயிலில் உடல் சூடாக இருக்கும்போது, திடீரென குளிர்ந்த நீரில் இறங்கும்போது உடலில் தசைப்பிடிப்பு ஏற்படலாம். இது நீச்சல் தெரிந்தவர்களைக் கூட ஆபத்தில் தள்ளும். வெயிலினால் ஏற்படும் உடல் சோர்வுடன் நீந்தும்போது, சீக்கிரம் களைப்பு ஏற்பட்டு நீரிலிருந்து வெளியேற முடியாமல் போகலாம்.


எனவே பொதுமக்கள் நீர் நிலைகளில் இறங்கும் போது மிகவும் அவதானத்துடன் செயல்படுமாறு சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

நண்பர்களுடன் நீராடிய இளைஞன் உயிரிழப்பு - முல்லைத்தீவில் துயரச் சம்பவம் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கள்ளியடி பகுதியில் உள்ள பேராற்றில் நண்பர்களுடன் நீராடிய இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது.புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 20 வயது இளைஞனே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவரின் உடலம் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாயில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.இலங்கையில் வெயில் காலங்களில் நீர்நிலைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் ஒரு பாரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளன. குறிப்பாக விடுமுறை காலங்களிலும், வறட்சியான காலநிலையிலும் இவ்வாறான அனர்த்தங்கள் அதிகம் நிகழ்கின்றன.அதிக வெயிலில் உடல் சூடாக இருக்கும்போது, திடீரென குளிர்ந்த நீரில் இறங்கும்போது உடலில் தசைப்பிடிப்பு ஏற்படலாம். இது நீச்சல் தெரிந்தவர்களைக் கூட ஆபத்தில் தள்ளும். வெயிலினால் ஏற்படும் உடல் சோர்வுடன் நீந்தும்போது, சீக்கிரம் களைப்பு ஏற்பட்டு நீரிலிருந்து வெளியேற முடியாமல் போகலாம்.எனவே பொதுமக்கள் நீர் நிலைகளில் இறங்கும் போது மிகவும் அவதானத்துடன் செயல்படுமாறு சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement