• Sep 03 2026

பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமைக்கு எதிராக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் போராட்டம்

Chithra / Sep 2nd 2026, 10:07 am
image


பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளை வழங்க அரசாங்கம் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, அனைத்து அரச பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்கள் இன்று (02) போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.


பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளது.


பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாவிட்டால், எதிர்வரும் வாரத்தில் போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தக் கூட்டமைப்பின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.


அண்மைக் காலத்தில் பல்கலைக்கழக அமைப்பில் இருந்து சுமார் 1,000 விரிவுரையாளர்கள் வெளியேறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அதேவேளை, ஆண்டுதோறும் பல்கலைக்கழகங்களுக்கு சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டில் சுமார் 25,000 மாணவர்கள் சேர்க்கப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை சுமார் 45,000 ஆக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. 


பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமைக்கு எதிராக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் போராட்டம் பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளை வழங்க அரசாங்கம் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, அனைத்து அரச பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்கள் இன்று (02) போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளது.பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாவிட்டால், எதிர்வரும் வாரத்தில் போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தக் கூட்டமைப்பின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.அண்மைக் காலத்தில் பல்கலைக்கழக அமைப்பில் இருந்து சுமார் 1,000 விரிவுரையாளர்கள் வெளியேறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அதேவேளை, ஆண்டுதோறும் பல்கலைக்கழகங்களுக்கு சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டில் சுமார் 25,000 மாணவர்கள் சேர்க்கப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை சுமார் 45,000 ஆக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement