• Apr 21 2026

அபிவிருத்தி செய்யப்படும் திருகோணமலை எண்ணெய்க் குதங்கள்!

Chithra / Jan 16th 2025, 2:37 pm
image

 

இந்தியா மற்றும் இலங்கையுடன் இணைந்து நிறுவப்பட்ட ட்ரின்கோ பெட்ரோலியம் டெர்மினல் லிமிடெட் நிறுவனம் மூலம் திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் அபிவிருத்தி செய்யப்படும் என வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார். 

திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் வளாகத்திற்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டதன் பின்னர், ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

புதிய அரசாங்கத்தின் வலுசக்தி கொள்கை மற்றும் திட்டத்திற்கு இணங்க, திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் குதங்கள் மூலம் நாட்டிற்கு அதிக அளவு அந்நிய செலாவணியை ஈட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்தியா மற்றும் இலங்கையுடன் இணைந்து நிறுவப்பட்ட ட்ரின்கோ பெட்ரோலியம் டெர்மினல் லிமிடெட் நிறுவனத்தின் கீழுள்ள 61 குதங்களில், 4 குதங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தி செய்யப்படும் திருகோணமலை எண்ணெய்க் குதங்கள்  இந்தியா மற்றும் இலங்கையுடன் இணைந்து நிறுவப்பட்ட ட்ரின்கோ பெட்ரோலியம் டெர்மினல் லிமிடெட் நிறுவனம் மூலம் திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் அபிவிருத்தி செய்யப்படும் என வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார். திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் வளாகத்திற்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டதன் பின்னர், ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசாங்கத்தின் வலுசக்தி கொள்கை மற்றும் திட்டத்திற்கு இணங்க, திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் குதங்கள் மூலம் நாட்டிற்கு அதிக அளவு அந்நிய செலாவணியை ஈட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா மற்றும் இலங்கையுடன் இணைந்து நிறுவப்பட்ட ட்ரின்கோ பெட்ரோலியம் டெர்மினல் லிமிடெட் நிறுவனத்தின் கீழுள்ள 61 குதங்களில், 4 குதங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement