• May 17 2026

யாழில் கோர விபத்து; 19 வயது இளைஞன் பரிதாப மரணம்

Chithra / Mar 29th 2025, 3:08 pm
image

யாழ்ப்பாணம், சுன்னாகம் - கந்தரோடை, பழனி கோவிலடி பகுதியில் இன்றையதினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

சிவராசா பிரவீன் என்ற வயது 19 இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளானது இன்னொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது. 

இந்த விபத்தில் மேலும் ஒருவர் சிக்கிய நிலையில் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

விபத்து குறித்து விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் கோர விபத்து; 19 வயது இளைஞன் பரிதாப மரணம் யாழ்ப்பாணம், சுன்னாகம் - கந்தரோடை, பழனி கோவிலடி பகுதியில் இன்றையதினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிவராசா பிரவீன் என்ற வயது 19 இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த இளைஞன் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளானது இன்னொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது. இந்த விபத்தில் மேலும் ஒருவர் சிக்கிய நிலையில் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.விபத்து குறித்து விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement