இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் சாரதி மற்றும் முன், பின் இருக்கைகளில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் ஆசன பட்டி அணிவது நாளை (19) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்காக வழங்கப்பட்டிருந்த சுமார் ஒரு வருட கால அவகாசம் இன்று (18) நிறைவடைவதால், ஆசன பட்டி அணியாமல் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆசன பட்டி வசதி இல்லாத வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் அனுமதிக்கப்படமாட்டாது.
பழைய வாகன உரிமையாளர்களுக்கு ஆசன பட்டி பொருத்துவதற்காக பல தடவைகள் சலுகைக் காலம் வழங்கப்பட்டிருந்த நிலையில், இனிமேல் எந்தவொரு கால நீட்டிப்பும் வழங்கப்படாது என தேசிய வீதி பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.
விபத்துகளில் உயிரிழப்பு மற்றும் கடுமையான காயங்களைத் தடுப்பதே இந்தச் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதன் நோக்கம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்றுடன் நிறைவடையும் கால அவகாசம் - பயணிகளுக்கு நாளை முதல் கடும் விதிமுறை இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் சாரதி மற்றும் முன், பின் இருக்கைகளில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் ஆசன பட்டி அணிவது நாளை (19) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இதற்காக வழங்கப்பட்டிருந்த சுமார் ஒரு வருட கால அவகாசம் இன்று (18) நிறைவடைவதால், ஆசன பட்டி அணியாமல் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், ஆசன பட்டி வசதி இல்லாத வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் அனுமதிக்கப்படமாட்டாது. பழைய வாகன உரிமையாளர்களுக்கு ஆசன பட்டி பொருத்துவதற்காக பல தடவைகள் சலுகைக் காலம் வழங்கப்பட்டிருந்த நிலையில், இனிமேல் எந்தவொரு கால நீட்டிப்பும் வழங்கப்படாது என தேசிய வீதி பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.விபத்துகளில் உயிரிழப்பு மற்றும் கடுமையான காயங்களைத் தடுப்பதே இந்தச் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதன் நோக்கம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.