உர இருப்புக்கள் போதியளவு உள்ளதாக அரசாங்கம் உறுதியளித்த போதிலும், நீண்டகால அடிப்படையில் விவசாய உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படலாம் என பேராதனைப் பல்கலைக்கழக விவசாய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
விவசாய மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன இது குறித்துத் தெரிவிக்கையில்,
எதிர்வரும் ஜூலை மாதம் வரையிலான சாகுபடிக்குத் தேவையான யூரியா, மூரியேட் ஒஃப் பொட்டாஷ் மற்றும் திரிபில் சுப்பர் பொஸ்பேட் ஆகிய உர வகைகள் கையிருப்பில் உள்ளன.
உலகளாவிய எரிபொருள் விலை உயர்வால் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்தாலும், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையிலேயே உரம் விநியோகிக்கப்படும்.
விவசாயிகள் அதிக விலைக்கு தனியார் விற்பனையாளர்களிடம் உரத்தைக் கொள்வனவு செய்ய வேண்டாம் என்றும், அரசாங்க விநியோக வழிகளைப் பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை பேராதனைப் பல்கலைக்கழக விவசாயப் பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மரம்பே தெரிவிக்கையில், இலங்கையின் உணவுத் தொகுதி வெளிப்புற அதிர்ச்சிகளால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
உணவுப் பாதுகாப்பின்மை என்பது ஒரு 'மறைந்திருக்கும் பிசாசு' போன்றது, அதன் பாதிப்புகள் பாரிய சேதங்கள் ஏற்பட்ட பின்னரே வெளியில் தெரியும்.
உலகளவில் கடல் வழியாகக் கொண்டு செல்லப்படும் உரங்களில் மூன்றில் ஒரு பகுதி ஹோர்முஸ் நீரிணை வழியாகவே பயணிக்கின்றன. இப்பகுதியில் ஏற்படும் தடைகள் இலங்கையையும் நேரடியாகப் பாதிக்கும்.
இலங்கையின் நெற்பயிர்ச் செய்கையில் 90 வீதத்திற்கும் அதிகமானவை இயந்திரமயமாக்கப்பட்டுள்ளன. எனவே, எரிபொருள் தட்டுப்பாடு அல்லது விலை உயர்வு அறுவடை மற்றும் நிலத் தயாரிப்புப் பணிகளை முடக்கிவிடும்.
எனவே நெல், சோளம் மற்றும் தேயிலை போன்ற முக்கிய துறைகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும். அந்நியச் செலாவணி வருவாயைப் பாதுகாக்கவும், உள்நாட்டு உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யவும் உர விநியோகச் சங்கிலியைப் பலப்படுத்த வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மத்திய கிழக்கு பதற்றத்தால் இலங்கையின் உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: நிபுணர்கள் எச்சரிக்கை உர இருப்புக்கள் போதியளவு உள்ளதாக அரசாங்கம் உறுதியளித்த போதிலும், நீண்டகால அடிப்படையில் விவசாய உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படலாம் என பேராதனைப் பல்கலைக்கழக விவசாய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.விவசாய மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன இது குறித்துத் தெரிவிக்கையில்,எதிர்வரும் ஜூலை மாதம் வரையிலான சாகுபடிக்குத் தேவையான யூரியா, மூரியேட் ஒஃப் பொட்டாஷ் மற்றும் திரிபில் சுப்பர் பொஸ்பேட் ஆகிய உர வகைகள் கையிருப்பில் உள்ளன.உலகளாவிய எரிபொருள் விலை உயர்வால் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்தாலும், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையிலேயே உரம் விநியோகிக்கப்படும்.விவசாயிகள் அதிக விலைக்கு தனியார் விற்பனையாளர்களிடம் உரத்தைக் கொள்வனவு செய்ய வேண்டாம் என்றும், அரசாங்க விநியோக வழிகளைப் பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.இதேவேளை பேராதனைப் பல்கலைக்கழக விவசாயப் பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மரம்பே தெரிவிக்கையில், இலங்கையின் உணவுத் தொகுதி வெளிப்புற அதிர்ச்சிகளால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.உணவுப் பாதுகாப்பின்மை என்பது ஒரு 'மறைந்திருக்கும் பிசாசு' போன்றது, அதன் பாதிப்புகள் பாரிய சேதங்கள் ஏற்பட்ட பின்னரே வெளியில் தெரியும்.உலகளவில் கடல் வழியாகக் கொண்டு செல்லப்படும் உரங்களில் மூன்றில் ஒரு பகுதி ஹோர்முஸ் நீரிணை வழியாகவே பயணிக்கின்றன. இப்பகுதியில் ஏற்படும் தடைகள் இலங்கையையும் நேரடியாகப் பாதிக்கும்.இலங்கையின் நெற்பயிர்ச் செய்கையில் 90 வீதத்திற்கும் அதிகமானவை இயந்திரமயமாக்கப்பட்டுள்ளன. எனவே, எரிபொருள் தட்டுப்பாடு அல்லது விலை உயர்வு அறுவடை மற்றும் நிலத் தயாரிப்புப் பணிகளை முடக்கிவிடும்.எனவே நெல், சோளம் மற்றும் தேயிலை போன்ற முக்கிய துறைகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும். அந்நியச் செலாவணி வருவாயைப் பாதுகாக்கவும், உள்நாட்டு உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யவும் உர விநியோகச் சங்கிலியைப் பலப்படுத்த வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.