• Sep 20 2026

நான் ஏற்கனவே சுட்டிக்காட்டிய நபர்களே மீண்டும் அடிபடுகிறார்கள்: ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் குறித்து சரத் பொன்சேகா பரபரப்பு கருத்து!

Chithra / Sep 20th 2026, 10:44 am
image


ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாகத் தற்போது மீண்டும் பேசப்பட்டு வரும் சில முக்கிய நபர்கள் குறித்து, தான் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்ததாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நேற்று (19) ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, 


ராஜபக்ஷ குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் அரசியல் எதிர்காலம் குறித்தும் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.


தற்போதைய அரசாங்கம் இத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மிகுந்த ஆர்வத்துடன் முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனப் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் கோருவதற்கு முழு உரிமையும் உண்டு என்றார். மேலும், இந்த விசாரணைகளின் மூலம் விரைவில் தெளிவான முடிவுகள் கிடைக்கும் எனத் தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் நாட்டைச் சூறையாடியதாகத் தான் ஏற்கனவே கூறியதை நினைவுகூர்ந்த பொன்சேகா, ஷிரந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட அனைவரும் சட்டரீதியான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றார். சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனைகள் இடம்பெற்றிருந்தால், அதற்கான பதில்களை அவர்கள் சட்டத்தின் முன் அளித்தாக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


2029-ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ஷ இந்நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என யாராவது எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. அது நாட்டிற்குப் பொருத்தமான நல்லதொரு முடிவாக இருக்காது. எனினும், நாமல் அரசியலில் முன்னேறிச் செல்வதற்கான பாதைகள் திறந்தே உள்ளன; அவர் தாராளமாக அந்த வழியில் செல்லலாம்" எனச் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்தார்.

நான் ஏற்கனவே சுட்டிக்காட்டிய நபர்களே மீண்டும் அடிபடுகிறார்கள்: ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் குறித்து சரத் பொன்சேகா பரபரப்பு கருத்து ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாகத் தற்போது மீண்டும் பேசப்பட்டு வரும் சில முக்கிய நபர்கள் குறித்து, தான் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்ததாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று (19) ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ராஜபக்ஷ குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் அரசியல் எதிர்காலம் குறித்தும் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.தற்போதைய அரசாங்கம் இத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மிகுந்த ஆர்வத்துடன் முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனப் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் கோருவதற்கு முழு உரிமையும் உண்டு என்றார். மேலும், இந்த விசாரணைகளின் மூலம் விரைவில் தெளிவான முடிவுகள் கிடைக்கும் எனத் தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் நாட்டைச் சூறையாடியதாகத் தான் ஏற்கனவே கூறியதை நினைவுகூர்ந்த பொன்சேகா, ஷிரந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட அனைவரும் சட்டரீதியான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றார். சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனைகள் இடம்பெற்றிருந்தால், அதற்கான பதில்களை அவர்கள் சட்டத்தின் முன் அளித்தாக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.2029-ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ஷ இந்நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என யாராவது எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. அது நாட்டிற்குப் பொருத்தமான நல்லதொரு முடிவாக இருக்காது. எனினும், நாமல் அரசியலில் முன்னேறிச் செல்வதற்கான பாதைகள் திறந்தே உள்ளன; அவர் தாராளமாக அந்த வழியில் செல்லலாம்" எனச் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement