• Jun 19 2026

விவசாயிகளை நடுத்தெருவில் விட்டுவிட்டு அரசாங்கம் சொகுசு வாழ்க்கை வாழ்கிறது: முன்னாள் அமைச்சர் சி. பீ. ரத்னாயக்க சாடல்!

shanu / Jun 19th 2026, 5:15 pm
image

நாட்டின் தற்போதைய பொருளாதாரப் பின்னடைவுக்கோ அல்லது வீழ்ச்சிக்கோ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மாத்திரம் பொறுப்பாளி அல்ல என அக்கட்சியின் மூத்த உறுப்பினரும், முன்னாள் அமைச்சர் சி. பீ. ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.


 பத்தரமுல்ல நெலும் மாவத்தையில்  அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், நாட்டின் பொருளாதாரத்தை தற்போதைய நிலைக்குத் தள்ளியது பொதுஜன பெரமுனதான் என எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுப் பிரசாரம் செய்து வருவதாகக் குற்றஞ்சாட்டினார். 


கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட அனைத்துப் பொருளாதாரத் தீர்மானங்களும், உலகளாவிய நெருக்கடிகளும், நீண்டகாலமாகத் தொடரும் கட்டமைப்புச் சிக்கல்களுமே இந்த நிலைக்குக் காரணம் என்பதால், ஒரு குறிப்பிட்ட கட்சியை மட்டும் இதற்காகக் கைகாட்டுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் அவர் சாடினார்.


இதேவேளை, நாட்டின் தற்போதைய விவசாய நிலைமைகள் மற்றும் விவசாயிகள் எதிர்நோக்கும் அவலங்கள் குறித்து தனது கடுமையான ஆதங்கத்தை வெளியிட்ட அவர், கிராமத்தில் இருந்து வந்து, விவசாய மக்களின் கஷ்டங்களை நன்கு அறிந்த ஒரு ஜனாதிபதி நாட்டுக்குக் கிடைப்பார் என்று நம்பியே அன்று மக்கள் வாக்களித்ததாகக் குறிப்பிட்டார். 


அன்று தேர்தலின் போது காவி ஆடையைத் தோளில் போட்டுக்கொண்டு, விவசாயிகளுக்காகக் குரல் கொடுப்பதாகக் கூறி, வைக்கோல் மீதும் வயல் வெளிகளிலும் அமர்ந்து நாடகமாடியவர்கள் இன்று பாராளுமன்றத்திற்கு வந்து டை, கோட் அணிந்துகொண்டு சீஸ் பர்கர்  சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என அவர் மிகக் காரசாரமாக விமர்சித்தார். 


இத்தகையவர்கள் இன்று விவசாயிகளையும் அவர்களின் துயரங்களையும் முற்றாக மறந்துவிட்டு, ஒட்டுமொத்த விவசாய சமூகத்தையே அழித்தொழிக்கும் காலகட்டத்தை உருவாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.


இலங்கையில் 70 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள நிலையில், நாட்டுக்குச் சோறூட்டும் மற்றும் காய்கறிகளை வழங்கும் அந்த ஒட்டுமொத்த விவசாயிகளின் பிரச்சினைகளையும் தற்போதைய ஆட்சியாளர்கள் முற்றாகப் புறக்கணித்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார். 


உற்பத்திக் பொருளாதாரத்தை நாட்டில் கட்டியெழுப்பி, விவசாயிகளை அரசாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனேயே அன்று மக்கள் இவர்களை ஆதரித்த போதிலும், அன்று விவசாயிகளின் வயல்களுக்கும், உருளைக்கிழங்கு மற்றும் காய்கறித் தோட்டங்களுக்கும் நேரடியாகச் சென்று வாக்குறுதிகளை அள்ளி வீசியவர்கள் இன்று மௌனம் காப்பதாக அவர் தெரிவித்தார். 


நுவரெலியா போன்ற பகுதிகளில் உருளைக்கிழங்கு மற்றும் பேரிக்காய் விவசாயம் முற்றாக அழிக்கப்பட்டு வருவதைப் போல, ஒட்டுமொத்த உள்நாட்டு விவசாயத்தையும் இல்லாமல் செய்யும் சதியே இன்று அரங்கேறி வருவதாகத் தெரிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.


நாம் வெளிநாடுகளில் தங்கியிருக்காமல், உள்நாட்டு உற்பத்தியில் சுயசார்புடையவர்களாக மாற வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், இலங்கையின் வரலாற்றில் டி. ஏ. ராஜபக்ஷ போன்ற தலைவர்கள் மக்களின் பேராதரவுடன் பாரம்பரியமாக விவசாயத்தை எவ்வாறெல்லாம் போற்றிப் பாதுகாத்தார்கள் என்பதை நினைவு கூர்ந்தார். 


அன்று பசளைகளை வழங்கி, ஒவ்வொரு அங்குல நிலத்தையும் பயிர்ச் செய்கைக்கு உட்படுத்தி, நெல் ஆலைகளை மேம்படுத்தி, மக்களின் களஞ்சியங்களை நிரப்பக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுத்த வரலாற்றைச் சுட்டிக்காட்டிய அவர், அதன் பயனாகவே மத்தள விமான நிலையம் போன்ற இடங்களில் நெல் மூட்டைகளை களஞ்சியப்படுத்தும் அளவுக்கு உள்நாட்டு உற்பத்தி பெருகியிருந்தது என்பதை மக்கள் அறிவார்கள் என்றார்.


ஆனால் இன்று விதை நெல்லுக்கான விலை 1,500 அல்லது 2,000 ரூபாயில் இருந்து 5,000 முதல் 6,000 ரூபாய் வரை உயர்ந்துள்ள போதிலும், விதை நெல் உற்பத்தியை மேம்படுத்த அரசாங்கத்திடம் எந்தவொரு முறையான திட்டமும் இல்லை என அவர் சாடினார். கீரி சம்பா, சம்பா போன்ற உள்நாட்டு அரிசி உற்பத்திகளைப் புறந்தள்ளிவிட்டு, வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்து தங்களின் மடிகளையும் பைகளையும் நிரப்பிக் கொள்ளவே ஆட்சியாளர்கள் முற்படுகிறார்கள் என்று அவர் குற்றம் சுமத்தினார். 


அத்துடன் விவசாயிகளுக்குத் தேவையான அடிப்படைப் பசளைகள் எதுவும் உரிய நேரத்தில் வழங்கப்படுவதில்லை என்றும், பசளை வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும் அது வெறும் 15 சதவீத விவசாயிகளுக்கு மட்டுமே கிடைத்துள்ளதால் ஏனைய விவசாயிகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது என்றும் அவர் விபரித்தார். பசளைக்கான மானிய நிதி கூட 40 சதவீதமே வழங்கப்பட்டுள்ளதால், ஏனைய விவசாயிகள் விவசாயத்தைக் கைவிட்டுச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.


முன்பு ஒரு வயல் தொழிலாளிக்கான தினக்கூலி 2,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அது 3,500 முதல் 4,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளதால், ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்வதற்கு விவசாயிகளுக்கு எவ்வளவு செலவாகிறது என்பதை அரசாங்கம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். 


இந்த மோசமான நடைமுறையினால், பெரும் முதலாளிகள் சிலரை மட்டும் பாதுகாத்துவிட்டு, ஏனைய நடுத்தர மற்றும் ஏழை விவசாயிகளை நடுத்தெருவில் விட்டு ஒட்டுமொத்தமாக அழிக்கும் ஒரு தந்திரோபாயமே நாட்டில் நடப்பதாக அவர் குற்றம் சாட்டினார். பராக்கிரமபாகு மன்னன் காலத்திலிருந்தே போற்றப்பட்ட இலங்கையின் விவசாயப் பாரம்பரிய வரலாறு, இன்று இந்த ஆட்சியாளர்களால் முற்றாக சிதைக்கப்பட்டு வருவதாகவும் முன்னாள் அமைச்சர் சி. பீ. ரத்னாயக்க மேலும் தெரிவித்தார்.

விவசாயிகளை நடுத்தெருவில் விட்டுவிட்டு அரசாங்கம் சொகுசு வாழ்க்கை வாழ்கிறது: முன்னாள் அமைச்சர் சி. பீ. ரத்னாயக்க சாடல் நாட்டின் தற்போதைய பொருளாதாரப் பின்னடைவுக்கோ அல்லது வீழ்ச்சிக்கோ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மாத்திரம் பொறுப்பாளி அல்ல என அக்கட்சியின் மூத்த உறுப்பினரும், முன்னாள் அமைச்சர் சி. பீ. ரத்னாயக்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல நெலும் மாவத்தையில்  அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், நாட்டின் பொருளாதாரத்தை தற்போதைய நிலைக்குத் தள்ளியது பொதுஜன பெரமுனதான் என எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுப் பிரசாரம் செய்து வருவதாகக் குற்றஞ்சாட்டினார். கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட அனைத்துப் பொருளாதாரத் தீர்மானங்களும், உலகளாவிய நெருக்கடிகளும், நீண்டகாலமாகத் தொடரும் கட்டமைப்புச் சிக்கல்களுமே இந்த நிலைக்குக் காரணம் என்பதால், ஒரு குறிப்பிட்ட கட்சியை மட்டும் இதற்காகக் கைகாட்டுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் அவர் சாடினார்.இதேவேளை, நாட்டின் தற்போதைய விவசாய நிலைமைகள் மற்றும் விவசாயிகள் எதிர்நோக்கும் அவலங்கள் குறித்து தனது கடுமையான ஆதங்கத்தை வெளியிட்ட அவர், கிராமத்தில் இருந்து வந்து, விவசாய மக்களின் கஷ்டங்களை நன்கு அறிந்த ஒரு ஜனாதிபதி நாட்டுக்குக் கிடைப்பார் என்று நம்பியே அன்று மக்கள் வாக்களித்ததாகக் குறிப்பிட்டார். அன்று தேர்தலின் போது காவி ஆடையைத் தோளில் போட்டுக்கொண்டு, விவசாயிகளுக்காகக் குரல் கொடுப்பதாகக் கூறி, வைக்கோல் மீதும் வயல் வெளிகளிலும் அமர்ந்து நாடகமாடியவர்கள் இன்று பாராளுமன்றத்திற்கு வந்து டை, கோட் அணிந்துகொண்டு சீஸ் பர்கர்  சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என அவர் மிகக் காரசாரமாக விமர்சித்தார். இத்தகையவர்கள் இன்று விவசாயிகளையும் அவர்களின் துயரங்களையும் முற்றாக மறந்துவிட்டு, ஒட்டுமொத்த விவசாய சமூகத்தையே அழித்தொழிக்கும் காலகட்டத்தை உருவாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.இலங்கையில் 70 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள நிலையில், நாட்டுக்குச் சோறூட்டும் மற்றும் காய்கறிகளை வழங்கும் அந்த ஒட்டுமொத்த விவசாயிகளின் பிரச்சினைகளையும் தற்போதைய ஆட்சியாளர்கள் முற்றாகப் புறக்கணித்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார். உற்பத்திக் பொருளாதாரத்தை நாட்டில் கட்டியெழுப்பி, விவசாயிகளை அரசாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனேயே அன்று மக்கள் இவர்களை ஆதரித்த போதிலும், அன்று விவசாயிகளின் வயல்களுக்கும், உருளைக்கிழங்கு மற்றும் காய்கறித் தோட்டங்களுக்கும் நேரடியாகச் சென்று வாக்குறுதிகளை அள்ளி வீசியவர்கள் இன்று மௌனம் காப்பதாக அவர் தெரிவித்தார். நுவரெலியா போன்ற பகுதிகளில் உருளைக்கிழங்கு மற்றும் பேரிக்காய் விவசாயம் முற்றாக அழிக்கப்பட்டு வருவதைப் போல, ஒட்டுமொத்த உள்நாட்டு விவசாயத்தையும் இல்லாமல் செய்யும் சதியே இன்று அரங்கேறி வருவதாகத் தெரிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.நாம் வெளிநாடுகளில் தங்கியிருக்காமல், உள்நாட்டு உற்பத்தியில் சுயசார்புடையவர்களாக மாற வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், இலங்கையின் வரலாற்றில் டி. ஏ. ராஜபக்ஷ போன்ற தலைவர்கள் மக்களின் பேராதரவுடன் பாரம்பரியமாக விவசாயத்தை எவ்வாறெல்லாம் போற்றிப் பாதுகாத்தார்கள் என்பதை நினைவு கூர்ந்தார். அன்று பசளைகளை வழங்கி, ஒவ்வொரு அங்குல நிலத்தையும் பயிர்ச் செய்கைக்கு உட்படுத்தி, நெல் ஆலைகளை மேம்படுத்தி, மக்களின் களஞ்சியங்களை நிரப்பக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுத்த வரலாற்றைச் சுட்டிக்காட்டிய அவர், அதன் பயனாகவே மத்தள விமான நிலையம் போன்ற இடங்களில் நெல் மூட்டைகளை களஞ்சியப்படுத்தும் அளவுக்கு உள்நாட்டு உற்பத்தி பெருகியிருந்தது என்பதை மக்கள் அறிவார்கள் என்றார்.ஆனால் இன்று விதை நெல்லுக்கான விலை 1,500 அல்லது 2,000 ரூபாயில் இருந்து 5,000 முதல் 6,000 ரூபாய் வரை உயர்ந்துள்ள போதிலும், விதை நெல் உற்பத்தியை மேம்படுத்த அரசாங்கத்திடம் எந்தவொரு முறையான திட்டமும் இல்லை என அவர் சாடினார். கீரி சம்பா, சம்பா போன்ற உள்நாட்டு அரிசி உற்பத்திகளைப் புறந்தள்ளிவிட்டு, வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்து தங்களின் மடிகளையும் பைகளையும் நிரப்பிக் கொள்ளவே ஆட்சியாளர்கள் முற்படுகிறார்கள் என்று அவர் குற்றம் சுமத்தினார். அத்துடன் விவசாயிகளுக்குத் தேவையான அடிப்படைப் பசளைகள் எதுவும் உரிய நேரத்தில் வழங்கப்படுவதில்லை என்றும், பசளை வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும் அது வெறும் 15 சதவீத விவசாயிகளுக்கு மட்டுமே கிடைத்துள்ளதால் ஏனைய விவசாயிகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது என்றும் அவர் விபரித்தார். பசளைக்கான மானிய நிதி கூட 40 சதவீதமே வழங்கப்பட்டுள்ளதால், ஏனைய விவசாயிகள் விவசாயத்தைக் கைவிட்டுச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.முன்பு ஒரு வயல் தொழிலாளிக்கான தினக்கூலி 2,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அது 3,500 முதல் 4,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளதால், ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்வதற்கு விவசாயிகளுக்கு எவ்வளவு செலவாகிறது என்பதை அரசாங்கம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இந்த மோசமான நடைமுறையினால், பெரும் முதலாளிகள் சிலரை மட்டும் பாதுகாத்துவிட்டு, ஏனைய நடுத்தர மற்றும் ஏழை விவசாயிகளை நடுத்தெருவில் விட்டு ஒட்டுமொத்தமாக அழிக்கும் ஒரு தந்திரோபாயமே நாட்டில் நடப்பதாக அவர் குற்றம் சாட்டினார். பராக்கிரமபாகு மன்னன் காலத்திலிருந்தே போற்றப்பட்ட இலங்கையின் விவசாயப் பாரம்பரிய வரலாறு, இன்று இந்த ஆட்சியாளர்களால் முற்றாக சிதைக்கப்பட்டு வருவதாகவும் முன்னாள் அமைச்சர் சி. பீ. ரத்னாயக்க மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement