சவூதி அரேபியாவின் யான்பு துறைமுகத்துக்கு மேற்கே சுமார் 63 கடல் மைல் தொலைவில், எண்ணெய் டேங்கர் கப்பல் ஒன்று அடையாளம் தெரியாத ட்ரோனால் தாக்கப்பட்டதாக இங்கிலாந்து கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் (UKMTO) தெரிவித்துள்ளது.
தாக்குதலைத் தொடர்ந்து கப்பலின் பிரதான தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், சம்பவம் தொடர்பாக கடல்சார் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பல் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரி அளித்த தகவலின்படி, கப்பலில் இருந்த அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளதுடன், அனைவரும் கணக்கில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தச் சம்பவத்தால் கடலில் எந்தவித சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
கப்பலைத் தாக்கிய ட்ரோன் எந்த வகையைச் சேர்ந்தது, எங்கிருந்து ஏவப்பட்டது அல்லது தாக்குதலுக்குப் பின்னால் யார் உள்ளனர் என்பது உடனடியாகத் தெரியவரவில்லை.
செங்கடல் மற்றும் அரேபியக் கடல் பகுதிகளில் கப்பல் போக்குவரத்து ஏற்கனவே பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், சவூதி அரேபிய கடற்பரப்புக்கு அருகே எண்ணெய் டேங்கர் மீது இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவம் பிராந்திய கடல்சார் பாதுகாப்பு குறித்து புதிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.
எண்ணெய் டேங்கர் மீது திடீர் ட்ரோன் தாக்குதல்-சவூதி கடற்பரப்பில் வெடித்த பதற்றம் சவூதி அரேபியாவின் யான்பு துறைமுகத்துக்கு மேற்கே சுமார் 63 கடல் மைல் தொலைவில், எண்ணெய் டேங்கர் கப்பல் ஒன்று அடையாளம் தெரியாத ட்ரோனால் தாக்கப்பட்டதாக இங்கிலாந்து கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் (UKMTO) தெரிவித்துள்ளது.தாக்குதலைத் தொடர்ந்து கப்பலின் பிரதான தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், சம்பவம் தொடர்பாக கடல்சார் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கப்பல் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரி அளித்த தகவலின்படி, கப்பலில் இருந்த அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளதுடன், அனைவரும் கணக்கில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்தச் சம்பவத்தால் கடலில் எந்தவித சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.கப்பலைத் தாக்கிய ட்ரோன் எந்த வகையைச் சேர்ந்தது, எங்கிருந்து ஏவப்பட்டது அல்லது தாக்குதலுக்குப் பின்னால் யார் உள்ளனர் என்பது உடனடியாகத் தெரியவரவில்லை.செங்கடல் மற்றும் அரேபியக் கடல் பகுதிகளில் கப்பல் போக்குவரத்து ஏற்கனவே பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், சவூதி அரேபிய கடற்பரப்புக்கு அருகே எண்ணெய் டேங்கர் மீது இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவம் பிராந்திய கடல்சார் பாதுகாப்பு குறித்து புதிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.