• Aug 03 2026

வானிலையில் திடீர் மாற்றம்: அடுத்த 36 மணி நேரத்தில் என்ன நடக்கும்?

Tamil nila / Aug 2nd 2026, 6:51 pm
image

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான புதிய வானிலை அறிக்கையின் படி, நாட்டின் பல பகுதிகளில் வானிலையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படவுள்ளன.

மழையின் பிடியில் மலையகமும்  சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், அவ்வப்போது தொடர் மழை பெய்யும். 

குறிப்பாக, இப்பகுதிகளின் சில இடங்களில் 50 மில்லிமீட்டர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்பதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

ஏனைய மாகாணங்களின் நிலை மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள், கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட மேல் மாகாணத்திலும், வடமேல் மாகாணத்தின் சில பகுதிகளிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள்  மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது

கிழக்கு மற்றும் ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பகல் பொழுது வழக்கம் போல் இருந்தாலும், பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் திடீர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறட்சியான மற்றும் வெப்பமான வானிலையே மேலோங்கி காணப்படும். சீறிப்பாயும் பலத்த காற்று மழை ஒரு புறமிருக்க, மறுபுறம் நாட்டின் பல மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கவுள்ளது.

வடமத்திய, சப்ரகமுவ, தென், மத்திய, வடமேல் மாகாணங்களிலும் மற்றும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று சுழன்றடிக்க வாய்ப்புள்ளது

பொதுமக்களுக்கான அவசர அறிவுறுத்தல் இடியுடன் கூடிய மழை பெய்யும் தருணங்களில், தற்காலிகமாக வீசக்கூடிய சூறாவளிக் காற்று மற்றும் ஆபத்தான மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும்.

இதனால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைத் தவிர்க்க, பொதுமக்கள் அனைவரும் முன்கூட்டியே தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மிக அவசரமாக கேட்டுக்கொண்டுள்ளது.

வானிலையில் திடீர் மாற்றம்: அடுத்த 36 மணி நேரத்தில் என்ன நடக்கும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான புதிய வானிலை அறிக்கையின் படி, நாட்டின் பல பகுதிகளில் வானிலையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படவுள்ளன.மழையின் பிடியில் மலையகமும்  சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், அவ்வப்போது தொடர் மழை பெய்யும். குறிப்பாக, இப்பகுதிகளின் சில இடங்களில் 50 மில்லிமீட்டர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்பதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.ஏனைய மாகாணங்களின் நிலை மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள், கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட மேல் மாகாணத்திலும், வடமேல் மாகாணத்தின் சில பகுதிகளிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள்  மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதுகிழக்கு மற்றும் ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பகல் பொழுது வழக்கம் போல் இருந்தாலும், பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் திடீர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.நாட்டின் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறட்சியான மற்றும் வெப்பமான வானிலையே மேலோங்கி காணப்படும். சீறிப்பாயும் பலத்த காற்று மழை ஒரு புறமிருக்க, மறுபுறம் நாட்டின் பல மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கவுள்ளது.வடமத்திய, சப்ரகமுவ, தென், மத்திய, வடமேல் மாகாணங்களிலும் மற்றும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று சுழன்றடிக்க வாய்ப்புள்ளதுபொதுமக்களுக்கான அவசர அறிவுறுத்தல் இடியுடன் கூடிய மழை பெய்யும் தருணங்களில், தற்காலிகமாக வீசக்கூடிய சூறாவளிக் காற்று மற்றும் ஆபத்தான மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும்.இதனால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைத் தவிர்க்க, பொதுமக்கள் அனைவரும் முன்கூட்டியே தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மிக அவசரமாக கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement