யேமனின் அன்சரல்லா படைகள் தெற்கு சவூதி அரேபியா மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, சவூதி அராம்கோவின் சில வசதிகள் கடும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜிசான், அபா மற்றும் அபாவின் வடக்குப் பகுதிகளில் உள்ள சில வசதிகளில் தீப்பற்றியதாகவும், தாக்குதலுக்குப் பின்னர் அப்பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதல்கள் சவூதி அரேபியாவின் முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், சேதத்தின் முழுமையான அளவு குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
யேமன்–சவூதி எல்லைப் பகுதிகளில் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் பிராந்திய எண்ணெய் விநியோகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பற்றி எரியும் சவூதி எண்ணெய் உள்கட்டமைப்பு யேமனின் அன்சரல்லா படைகள் தெற்கு சவூதி அரேபியா மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, சவூதி அராம்கோவின் சில வசதிகள் கடும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜிசான், அபா மற்றும் அபாவின் வடக்குப் பகுதிகளில் உள்ள சில வசதிகளில் தீப்பற்றியதாகவும், தாக்குதலுக்குப் பின்னர் அப்பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தத் தாக்குதல்கள் சவூதி அரேபியாவின் முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், சேதத்தின் முழுமையான அளவு குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.யேமன்–சவூதி எல்லைப் பகுதிகளில் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் பிராந்திய எண்ணெய் விநியோகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.