போர் மற்றும் பொருளாதாரத் தடைகளால் ஈரான் நெருக்கடியைச் சந்தித்து வரும் வேளையில், "மாஸ்கோவும் தெஹ்ரானும் எப்போதும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருப்பார்கள்" என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரி பெலூசோவ் (Andrey Belousov) உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெற்ற உயர்மட்டப் பாதுகாப்பு மாநாட்டின் ஒரு பகுதியாக, ஈரான் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் தலாயி-நிக் (Brigadier General Talaei-Nik) அவர்களை பெலூசோவ் சந்தித்துப் பேசினார்.
"கடந்த காலத்தைப் போலவே, இனிவரும் காலங்களிலும் நிலைமை எப்படி மாறினாலும் மாஸ்கோவும் தெஹ்ரானும் தொடர்ந்து ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கும்," என்று பெலூசோவ் தனது உரையில் வலியுறுத்தினார்.
ஈரான் மீதான போர் மற்றும் மோதல்களை இராஜதந்திர ரீதியாக மட்டுமே தீர்க்க வேண்டும் என ரஷ்யா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
ஈரானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு ரஷ்யா தனது முழுமையான ஆதரவைத் தெரிவிப்பதாகவும், ஈரான் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை முறியடிக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தற்போது ரஷ்யாவில் அதிபர் புதினை சந்தித்துப் பேசி வரும் நிலையில், பாதுகாப்பு அமைச்சரின் இந்த அறிக்கை இரு நாடுகளுக்கும் இடையே ஒரு 'இராணுவப் பாதுகாப்பு ஒப்பந்தம்' (Mutual Defense Clause) மறைமுகமாக உருவாவதை உறுதிப்படுத்துகிறது.
ரஷ்ய அமெரிக்காவிற்கு விடுத்த மறைமுக எச்சரிக்கை போர் மற்றும் பொருளாதாரத் தடைகளால் ஈரான் நெருக்கடியைச் சந்தித்து வரும் வேளையில், "மாஸ்கோவும் தெஹ்ரானும் எப்போதும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருப்பார்கள்" என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரி பெலூசோவ் (Andrey Belousov) உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெற்ற உயர்மட்டப் பாதுகாப்பு மாநாட்டின் ஒரு பகுதியாக, ஈரான் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் தலாயி-நிக் (Brigadier General Talaei-Nik) அவர்களை பெலூசோவ் சந்தித்துப் பேசினார்."கடந்த காலத்தைப் போலவே, இனிவரும் காலங்களிலும் நிலைமை எப்படி மாறினாலும் மாஸ்கோவும் தெஹ்ரானும் தொடர்ந்து ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கும்," என்று பெலூசோவ் தனது உரையில் வலியுறுத்தினார்.ஈரான் மீதான போர் மற்றும் மோதல்களை இராஜதந்திர ரீதியாக மட்டுமே தீர்க்க வேண்டும் என ரஷ்யா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.ஈரானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு ரஷ்யா தனது முழுமையான ஆதரவைத் தெரிவிப்பதாகவும், ஈரான் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை முறியடிக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தற்போது ரஷ்யாவில் அதிபர் புதினை சந்தித்துப் பேசி வரும் நிலையில், பாதுகாப்பு அமைச்சரின் இந்த அறிக்கை இரு நாடுகளுக்கும் இடையே ஒரு 'இராணுவப் பாதுகாப்பு ஒப்பந்தம்' (Mutual Defense Clause) மறைமுகமாக உருவாவதை உறுதிப்படுத்துகிறது.