• Jul 14 2026

போக்குவரத்து அபராதம் செலுத்துமாறு வரும் போலி குறுஞ்செய்திகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை

Chithra / Jul 13th 2026, 3:46 pm
image


சந்தேகத்திற்கிடமான இணைய இணைப்புகள் மூலம் போக்குவரத்து அபராதங்களை ஆன்லைனில் செலுத்துமாறு அறிவுறுத்தும் மோசடி குறுஞ்செய்திகள் மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் தொடர்பில் வாகன சாரதிகளுக்கு இலங்கை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திலிருந்து (DMT) அனுப்பப்பட்டவை போன்று தோற்றமளிக்கும் குறித்த செய்திகள், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தொகையை ஒரு வாரத்திற்குள் செலுத்துமாறு அறிவுறுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.


எனினும், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் இவ்வாறான எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என போக்குவரத்து ஒழுங்குமுறை மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனதீர தெரிவித்துள்ளார்.


இவ்வாறான செய்திகள் முற்றிலும் போலியானவை என தெரிவித்த அவர், அவற்றில் உள்ள இணைப்புகளை திறக்க வேண்டாம் எனவும், தனிப்பட்ட தகவல்கள் அல்லது வங்கி விவரங்களை வழங்க வேண்டாம் எனவும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


மேலும், குறித்த மோசடி செய்திகள் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

போக்குவரத்து அபராதம் செலுத்துமாறு வரும் போலி குறுஞ்செய்திகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை சந்தேகத்திற்கிடமான இணைய இணைப்புகள் மூலம் போக்குவரத்து அபராதங்களை ஆன்லைனில் செலுத்துமாறு அறிவுறுத்தும் மோசடி குறுஞ்செய்திகள் மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் தொடர்பில் வாகன சாரதிகளுக்கு இலங்கை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திலிருந்து (DMT) அனுப்பப்பட்டவை போன்று தோற்றமளிக்கும் குறித்த செய்திகள், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தொகையை ஒரு வாரத்திற்குள் செலுத்துமாறு அறிவுறுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.எனினும், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் இவ்வாறான எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என போக்குவரத்து ஒழுங்குமுறை மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனதீர தெரிவித்துள்ளார்.இவ்வாறான செய்திகள் முற்றிலும் போலியானவை என தெரிவித்த அவர், அவற்றில் உள்ள இணைப்புகளை திறக்க வேண்டாம் எனவும், தனிப்பட்ட தகவல்கள் அல்லது வங்கி விவரங்களை வழங்க வேண்டாம் எனவும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும், குறித்த மோசடி செய்திகள் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement