• May 20 2026

கால்நடைகளை ஏற்றிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

Chithra / May 20th 2026, 11:01 am
image

சட்டவிரோதமான முறையில் கால்நடைகளை ஏற்றிச்சென்ற லொறி ஒன்றின் மீது ஹுங்கம, கட்டகடுவ பகுதியில் வைத்து பொலிஸார் இன்று (20) காலை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.


லொறி ஒன்றில் சட்டவிரோதமாக கால்நடைகள் கடத்தப்படுவதாக ஹுங்கம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்,  கட்டகடுவ பகுதியில் வீதித் தடை  ஏற்படுத்தப்பட்டிருந்தது.


எனினும், குறித்த லொறி வீதித் தடையையும் மீறி தப்பிச் சென்றுள்ளது.


இதனையடுத்து, பொலிஸார் அந்த லொறியைப் பின்தொடர்ந்து சென்று நிறுத்த முயன்ற போதிலும்,  நிறுத்தாமல் பயணித்ததால், துப்பாக்கிச் சூடு நடத்தி லொறி நிறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இதன்போது லொறியில் இருந்த நான்கு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  ஹுங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கால்நடைகளை ஏற்றிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு சட்டவிரோதமான முறையில் கால்நடைகளை ஏற்றிச்சென்ற லொறி ஒன்றின் மீது ஹுங்கம, கட்டகடுவ பகுதியில் வைத்து பொலிஸார் இன்று (20) காலை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.லொறி ஒன்றில் சட்டவிரோதமாக கால்நடைகள் கடத்தப்படுவதாக ஹுங்கம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்,  கட்டகடுவ பகுதியில் வீதித் தடை  ஏற்படுத்தப்பட்டிருந்தது.எனினும், குறித்த லொறி வீதித் தடையையும் மீறி தப்பிச் சென்றுள்ளது.இதனையடுத்து, பொலிஸார் அந்த லொறியைப் பின்தொடர்ந்து சென்று நிறுத்த முயன்ற போதிலும்,  நிறுத்தாமல் பயணித்ததால், துப்பாக்கிச் சூடு நடத்தி லொறி நிறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதன்போது லொறியில் இருந்த நான்கு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  ஹுங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement