பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவையில் ஈடுபட்டிருந்த போது, போதைப்பொருள் பாவித்தமை உறுதி செய்யப்பட்ட 8 சாரதிகள் மற்றும் நடத்துநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை தெற்கு பொலிஸ் நிலைய அதிகாரிகளால், தேசிய போக்குவரத்து மருத்துவ அதிகாரிகளுடன் இணைந்து நேற்று (19) இந்த கூட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவில் நடத்தப்பட்ட இந்த விசேட சோதனையின் போது,
பயணிகள் போக்குவரத்து பேருந்துகளில் சேவையில் ஈடுபட்டிருந்த சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், போதைப்பொருள் பாவித்து பணியில் ஈடுபட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 35 முதல் 57 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், அவர்கள் பயாகல, யட்டியன, தொடம்கொட, தெபுவன, மீகஹதென்ன மற்றும் களுத்துறை தெற்கு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுபோதையில் பயணிகள் சேவை; திடீர் சோதனையில் 8 சாரதிகள், நடத்துநர் ஒருவர் கைது பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவையில் ஈடுபட்டிருந்த போது, போதைப்பொருள் பாவித்தமை உறுதி செய்யப்பட்ட 8 சாரதிகள் மற்றும் நடத்துநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.களுத்துறை தெற்கு பொலிஸ் நிலைய அதிகாரிகளால், தேசிய போக்குவரத்து மருத்துவ அதிகாரிகளுடன் இணைந்து நேற்று (19) இந்த கூட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவில் நடத்தப்பட்ட இந்த விசேட சோதனையின் போது, பயணிகள் போக்குவரத்து பேருந்துகளில் சேவையில் ஈடுபட்டிருந்த சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், போதைப்பொருள் பாவித்து பணியில் ஈடுபட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்கள் 35 முதல் 57 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், அவர்கள் பயாகல, யட்டியன, தொடம்கொட, தெபுவன, மீகஹதென்ன மற்றும் களுத்துறை தெற்கு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.