• Jul 16 2026

காளான் வளர்ப்புக்கு புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்

dorin / Jul 15th 2026, 10:20 am
image

காளான் வளர்ப்பிற்காகப் புதிய காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இயங்கும் விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபை திட்டமிட்டுள்ளது.

இந்த காப்புறுதித் திட்டத்தின் கீழ், 250 காளான் வளர்ப்பு பைகளைக் கொண்ட காளான் வளர்ப்பு கூடம் ஒன்றினை மூன்று மாத காலத்திற்கு காப்புறுதி செய்வதற்கான தவணைக்கட்டணம் சுமார் 2,025 ரூபாயாகும்.

அத்துடன், நோய்கள் அல்லது பூச்சித் தாக்கங்கள் காரணமாக காளான் வளர்ப்பிற்கு சேதம் ஏற்பட்டால், 22,500 ரூபாய் காப்புறுதி இழப்பீட்டை வழங்குவதற்கும் இத்திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விவசாயத் திணைக்களத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக காளான் வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் இக்காப்புறுதிப் பாதுகாப்பினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், பயிர்களுக்கு ஏற்படக்கூடிய எதிர்பாராத நட்டங்களிலிருந்து பாதுகாப்பை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

காளான் வளர்ப்பை ஊக்குவித்து பிரபலப்படுத்தும் நோக்கில், விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபையினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

காளான் வளர்ப்புக்கு புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம் காளான் வளர்ப்பிற்காகப் புதிய காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இயங்கும் விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபை திட்டமிட்டுள்ளது.இந்த காப்புறுதித் திட்டத்தின் கீழ், 250 காளான் வளர்ப்பு பைகளைக் கொண்ட காளான் வளர்ப்பு கூடம் ஒன்றினை மூன்று மாத காலத்திற்கு காப்புறுதி செய்வதற்கான தவணைக்கட்டணம் சுமார் 2,025 ரூபாயாகும்.அத்துடன், நோய்கள் அல்லது பூச்சித் தாக்கங்கள் காரணமாக காளான் வளர்ப்பிற்கு சேதம் ஏற்பட்டால், 22,500 ரூபாய் காப்புறுதி இழப்பீட்டை வழங்குவதற்கும் இத்திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.விவசாயத் திணைக்களத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக காளான் வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் இக்காப்புறுதிப் பாதுகாப்பினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், பயிர்களுக்கு ஏற்படக்கூடிய எதிர்பாராத நட்டங்களிலிருந்து பாதுகாப்பை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.காளான் வளர்ப்பை ஊக்குவித்து பிரபலப்படுத்தும் நோக்கில், விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபையினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement