• Sep 11 2026

மாற்றுத்திறனாளிகளுக்காக ATM இயந்திரங்களில் புதிய வசதிகள் – வங்கிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

ATM
Chithra / Sep 10th 2026, 11:10 am
image


இலங்கையில் ATM இயந்திரங்களை கொண்டுள்ள அனைத்து வங்கிகளுக்கும் முக்கிய அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் யு.டி.என். ஜெயவீர தெரிவித்துள்ளார்.


அதன்படி, பார்வைக் குறைபாடுள்ளவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாடிக்கையாளர்களின் வசதியை கருத்திற்கொண்டு, நாட்டிலுள்ள அனைத்து ATM இயந்திரங்களிலும் குரல் வழிகாட்டல் வசதி மற்றும் பிரெய்லி விசைப்பலகைகளை பொருத்துமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், 

நவீன தொழில்நுட்ப வசதிகளை ATM இயந்திரங்களில் அறிமுகப்படுத்துவதன் மூலம் மாற்றுத்திறனாளி நபர்கள் பிறரின் உதவியின்றி தங்களது வங்கிச் சேவைகளை சுயமாகவும் இலகுவாகவும் பெற்றுக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.


மாற்றுத்திறனாளிகளுக்கான நிதி மற்றும் வங்கிச் சேவைகளுக்கான அணுகலை மேலும் மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்காக ATM இயந்திரங்களில் புதிய வசதிகள் – வங்கிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் இலங்கையில் ATM இயந்திரங்களை கொண்டுள்ள அனைத்து வங்கிகளுக்கும் முக்கிய அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் யு.டி.என். ஜெயவீர தெரிவித்துள்ளார்.அதன்படி, பார்வைக் குறைபாடுள்ளவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாடிக்கையாளர்களின் வசதியை கருத்திற்கொண்டு, நாட்டிலுள்ள அனைத்து ATM இயந்திரங்களிலும் குரல் வழிகாட்டல் வசதி மற்றும் பிரெய்லி விசைப்பலகைகளை பொருத்துமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், நவீன தொழில்நுட்ப வசதிகளை ATM இயந்திரங்களில் அறிமுகப்படுத்துவதன் மூலம் மாற்றுத்திறனாளி நபர்கள் பிறரின் உதவியின்றி தங்களது வங்கிச் சேவைகளை சுயமாகவும் இலகுவாகவும் பெற்றுக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.மாற்றுத்திறனாளிகளுக்கான நிதி மற்றும் வங்கிச் சேவைகளுக்கான அணுகலை மேலும் மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement