• Sep 11 2026

இறுதிக் கிரியைக்குச் சென்ற தாயும் மகனும் பலி - அனுராதபுரத்தில் சோக சம்பவம்

Chithra / Sep 10th 2026, 11:33 am
image


அனுராதபுரம், மரிதன்கடவல பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மரிதன்கடவல நகரில் நேற்று (09) காலை 10.35 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


தம்புள்ளை பகுதியில் உறவினர் ஒருவரின் இறுதிக் கிரியையில் கலந்துகொள்வதற்காக தாயும் மகனும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.


விபத்தில் 47 வயதுடைய மதுஷானி குணசிங்க மற்றும் அவரது 24 வயதுடைய மகனான நிகேஷ் ருவந்த தில்ஷன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.


உயிரிழந்த இளைஞர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த பல்கலைக்கழக மாணவர் என தெரியவந்துள்ளது.


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


இறுதிக் கிரியைக்குச் சென்ற தாயும் மகனும் பலி - அனுராதபுரத்தில் சோக சம்பவம் அனுராதபுரம், மரிதன்கடவல பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மரிதன்கடவல நகரில் நேற்று (09) காலை 10.35 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.தம்புள்ளை பகுதியில் உறவினர் ஒருவரின் இறுதிக் கிரியையில் கலந்துகொள்வதற்காக தாயும் மகனும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.விபத்தில் 47 வயதுடைய மதுஷானி குணசிங்க மற்றும் அவரது 24 வயதுடைய மகனான நிகேஷ் ருவந்த தில்ஷன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்த இளைஞர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த பல்கலைக்கழக மாணவர் என தெரியவந்துள்ளது.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement