வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா - ஈரான் மோதல்கள் தீவிரமடைந்துள்ள அதே வேளையில், மத்திய கிழக்கு போர்க்களத்தின் மற்றொரு முனையான லெபனானில் இஸ்ரேல் தனது அசுர வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து வருகிறது.
லெபனானின் மேற்கு பெக்கா (Western Beqaa) பிராந்தியத்தில் உள்ள சோமோர் (Sohmor) நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஹுசைனியா (Hussainiya) வழிபாட்டுத் தலத்தின் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள பயங்கர குண்டுவீச்சுத் தாக்குதல் ஒட்டுமொத்தப் பிராந்தியத்தையும் அதிரவைத்துள்ளது.
இஸ்ரேலியப் பாதுகாப்புப் படைகளின் (IDF) போர் விமானங்கள், சோமோர் நகரின் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அமைந்துள்ள ஷியா முஸ்லிம்களின் மிக முக்கிய ஆன்மீகத் தலமான ஹுசைனியா வழிபாட்டு மையத்தைக் குறிவைத்து அதிநவீன ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளன.
தாக்குதலின் அதிர்வில் அந்த வழிபாட்டுத் தலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல சிவில் உள்கட்டமைப்புகள் (Civil Infrastructures) அடுத்த சில நொடிகளில் வெடித்துச் சிதறி தரைமட்டமாகின.
இந்தக் கொடூரத் தாக்குதல் நடந்து முடிந்த சில நிமிடங்களில் எடுக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் காணொளிக் காட்சிகள் தற்பொழுது ஊடகங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன
தரைமட்டமான லெபனான் முக்கிய தளங்கள்-இஸ்ரேல் நடத்தும் அசுர வேட்டை வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா - ஈரான் மோதல்கள் தீவிரமடைந்துள்ள அதே வேளையில், மத்திய கிழக்கு போர்க்களத்தின் மற்றொரு முனையான லெபனானில் இஸ்ரேல் தனது அசுர வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து வருகிறது. லெபனானின் மேற்கு பெக்கா (Western Beqaa) பிராந்தியத்தில் உள்ள சோமோர் (Sohmor) நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஹுசைனியா (Hussainiya) வழிபாட்டுத் தலத்தின் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள பயங்கர குண்டுவீச்சுத் தாக்குதல் ஒட்டுமொத்தப் பிராந்தியத்தையும் அதிரவைத்துள்ளது.இஸ்ரேலியப் பாதுகாப்புப் படைகளின் (IDF) போர் விமானங்கள், சோமோர் நகரின் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அமைந்துள்ள ஷியா முஸ்லிம்களின் மிக முக்கிய ஆன்மீகத் தலமான ஹுசைனியா வழிபாட்டு மையத்தைக் குறிவைத்து அதிநவீன ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளன.தாக்குதலின் அதிர்வில் அந்த வழிபாட்டுத் தலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல சிவில் உள்கட்டமைப்புகள் (Civil Infrastructures) அடுத்த சில நொடிகளில் வெடித்துச் சிதறி தரைமட்டமாகின.இந்தக் கொடூரத் தாக்குதல் நடந்து முடிந்த சில நிமிடங்களில் எடுக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் காணொளிக் காட்சிகள் தற்பொழுது ஊடகங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன