முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கவலியுறுத்தி காணிகளுக்குரிய மக்கள் (28) இன்று ஐந்தாவதுநாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கேப்பாப்பிலவு மக்களின் குறித்த ஐந்தாம் நாள் போராட்டத்தில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனும் பங்கேற்றிருந்தார்.
குறிப்பாக கேப்பாப்பிலவில் 55குடும்பங்களுக்குரிய 59.5ஏக்கர் பூர்வீக வாழ்விடக்காணிகளும், 4 குடும்பங்களுக்குரிய 100 ஏக்கர் மத்தியவகுப்புக் காணிகளும் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தியே காணிகளுக்குரிய மக்களால் தொடர் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
மேலும் இந்த ஐந்தாம் நாள் ஆர்ப்பாட்டத்தில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், சட்டத்தரணி குமாரசிங்கம் கம்சன், சூழல் மற்றும் சமூகத்தின் அபிவிருத்தியை வலுவூட்டும் நிறுவனத்தின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் மாதுசனா திஷான் ஆகியோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
காணிகளை விடுவிக்க கோரி 5வது நாளாக தொடர் போராட்டத்தில் கேப்பாப்புலவு மக்கள் முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கவலியுறுத்தி காணிகளுக்குரிய மக்கள் (28) இன்று ஐந்தாவதுநாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கேப்பாப்பிலவு மக்களின் குறித்த ஐந்தாம் நாள் போராட்டத்தில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனும் பங்கேற்றிருந்தார்.குறிப்பாக கேப்பாப்பிலவில் 55குடும்பங்களுக்குரிய 59.5ஏக்கர் பூர்வீக வாழ்விடக்காணிகளும், 4 குடும்பங்களுக்குரிய 100 ஏக்கர் மத்தியவகுப்புக் காணிகளும் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தியே காணிகளுக்குரிய மக்களால் தொடர் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.மேலும் இந்த ஐந்தாம் நாள் ஆர்ப்பாட்டத்தில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், சட்டத்தரணி குமாரசிங்கம் கம்சன், சூழல் மற்றும் சமூகத்தின் அபிவிருத்தியை வலுவூட்டும் நிறுவனத்தின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் மாதுசனா திஷான் ஆகியோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.