• Sep 08 2026

நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்னரே ஜனாதிபதி கருத்து வெளியிடுவது நீதித்துறைக்கு அவமதிப்பு – ஜகத் குமார

Chithra / Sep 8th 2026, 1:27 pm
image


22வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நீதிமன்றம் தனது கருத்தை வெளியிடுவதற்கு முன்னரே ஜனாதிபதி, மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படாது என அறிவித்திருப்பது நாட்டின் நீதித்துறை அமைப்புக்கு செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய அவமதிப்பாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.


இன்றைய தினம் (08)  பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜகத் குமார, அரசாங்கமும் ஜனாதிபதியும் வெளியிடும் கருத்துக்களைப் பார்க்கும்போது நாட்டின் ஜனநாயகம் வீழ்ச்சியடைந்து வருவதாகத் தெரிகிறது எனக் குறிப்பிட்டார்.


ஒருபுறம் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை குறித்து பேசிக்கொண்டிருக்கும்போது, மறுபுறம் ஜனாதிபதி பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்டு, தங்களுக்கு தேவையான வகையில் நீதிமன்றத் தீர்ப்புகள் கிடைக்கும் எனக் கூறுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.


22வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நீதிமன்றம் என்ன கூறப் போகிறது என்பதை அறிந்துகொள்ள நாட்டு மக்கள் காத்திருக்கின்ற நிலையில், நீதிமன்றம் தனது கருத்தை வெளியிடுவதற்கு முன்னரே ஜனாதிபதி மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படாது என அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


மக்கள் வாக்கெடுப்பு இன்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றி, அதன் பின்னர் தங்களுக்கு தேவையான வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் முயற்சிப்பதாகத் தோன்றுகிறது எனவும் ஜகத் குமார கூறினார்.


இவ்வாறு ஜனாதிபதி முன்கூட்டியே கருத்து வெளியிடுவதன் மூலம் நீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதியின் கைகளில் இருப்பதாக ஒரு கருத்து மக்கள் மத்தியில் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அவ்வாறு கருத்து வெளியிடுவதற்கு ஜனாதிபதிக்கு எந்த உரிமையும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.


நாட்டின் மக்கள் தங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண நீதிமன்றத்தை நாடுவது, நீதித்துறையின் சுயாதீனத்தன்மை மீது நம்பிக்கை வைத்தே ஆகும் எனவும், ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளைப் பார்க்கும்போது ஒருபுறம் ஜனநாயக உரிமைகளை வழங்குவது போன்று காட்டிக்கொண்டு, மறுபுறம் ஜனநாயகத்தின் அனைத்து உரிமைகளையும் கட்டுப்படுத்த முயற்சிப்பதாகத் தெரிகிறது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.


தற்போது நாட்டில் தேர்தல் எதுவும் நடைபெறாத நிலையில் ஜனாதிபதி மக்கள் கூட்டங்களை நடத்த ஆரம்பித்திருப்பதாகவும் ஜகத் குமார குறிப்பிட்டார். இவ்வாறான அவசர மக்கள் சந்திப்புகள் மூலம் நீதித்துறைக்கு ஏதேனும் அழுத்தம் கொடுக்க முயற்சி செய்யப்படுகிறதா என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் தெரிவித்தார்.


ஜனாதிபதி இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மக்களிடம் வந்து கூறக்கூடிய விடயம் என்ன என கேள்வி எழுப்பிய அவர், நாட்டை அபிவிருத்தி செய்தோம், மக்கள் மகிழ்ச்சியாக வாழக்கூடிய நாட்டை உருவாக்கினோம் அல்லது நாட்டை வளமான நாடாக மாற்றினோம் என அரசாங்கத்தால் கூற முடியாது என தெரிவித்தார்.


எனினும், இந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வந்தர்களாகியுள்ளதாகவும், நாட்டின் மக்கள் மூன்று வேளை உணவு உண்பது மட்டுமல்லாது தற்போது இரண்டு வேளை உணவைக் கூட பெற்றுக்கொள்வதில் சிரமப்படுவதாகவும், பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.


மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அடுத்த ஜனாதிபதியாக வருவதற்காக நாட்டில் இல்லாத விடயங்களைப் பொய்யாகக் கூறி அரசாங்கம் முயற்சிப்பதாகவும் ஜகத் குமார தெரிவித்தார்.


நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக ஆதாரபூர்வமான வழக்கு ஒன்று இருந்தால், நீதிமன்றத் தீர்ப்புக்கும் சட்ட நடவடிக்கைகளுக்கும் தலைவணங்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.


நாமல் ராஜபக்ஷ எந்தத் தவறும் செய்யாதவர் என்பதால், எந்தவொரு நீதிமன்றத்திற்கும் எந்தவொரு ஆணைக்குழுவிற்கும் செல்ல அவர் ஒருபோதும் தயங்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.


ஆனால் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் நிமல் பெரேரா என்ற நபரின் கூற்றை நம்பி, பணத்தைப் பெற்றதாகக் கூறப்படும் நபரை கைது செய்யாமல், அவரைக் கொண்டு பொய்யான தகவல்களை உருவாக்கி எதிர்க்கட்சித் தலைவர்களை வேட்டையாட முயற்சிக்கப்படுமானால், அது சட்டம் தொடர்பான பிரச்சினையாகும் எனவும் ஜகத் குமார குறிப்பிட்டார்.


எனினும், நீதிமன்றத்தில் இந்த அனைத்து விடயங்கள் தொடர்பிலும் தங்களுடைய தரப்பு சரியானது என்பதை நிரூபிக்க முடியும் என தாங்கள் நம்புவதாகவும், ஆனால் பிணை வழங்கப்படாத வகையில் போலியான குற்றச்சாட்டுகளை உருவாக்க முயற்சிப்பதை தாங்கள் முழுமையாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


தங்களுக்கு எதிராக எத்தனை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும், செப்டெம்பர் 12ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டம் மிகவும் வெற்றிகரமாகவும் வலுவாகவும் நடத்தப்படும் எனவும், அந்தக் கூட்டத்தை எவராலும் தடுக்க முடியாது எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.


மேலும், 22வது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக எதிர்க்கட்சியை முழுமையாக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைத்து, எதிர்வரும் தேர்தல்களை நடத்தாமல் இருப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றனவா என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் கூறினார்.


அல்லது தேர்தல்கள் நடத்தப்பட்டாலும், அவை அரசாங்கத்திற்கு சாதகமான வகையில் நடைபெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்ற கேள்வியும் எழுவதாக அவர் தெரிவித்தார்.


இதற்கு எதிராக எதிர்காலத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அனைத்து அரசியல் சக்திகளும் ஒன்றிணைந்து பாரிய மக்கள் இயக்கமொன்றை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார மேலும் தெரிவித்தார்.

நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்னரே ஜனாதிபதி கருத்து வெளியிடுவது நீதித்துறைக்கு அவமதிப்பு – ஜகத் குமார 22வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நீதிமன்றம் தனது கருத்தை வெளியிடுவதற்கு முன்னரே ஜனாதிபதி, மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படாது என அறிவித்திருப்பது நாட்டின் நீதித்துறை அமைப்புக்கு செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய அவமதிப்பாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.இன்றைய தினம் (08)  பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜகத் குமார, அரசாங்கமும் ஜனாதிபதியும் வெளியிடும் கருத்துக்களைப் பார்க்கும்போது நாட்டின் ஜனநாயகம் வீழ்ச்சியடைந்து வருவதாகத் தெரிகிறது எனக் குறிப்பிட்டார்.ஒருபுறம் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை குறித்து பேசிக்கொண்டிருக்கும்போது, மறுபுறம் ஜனாதிபதி பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்டு, தங்களுக்கு தேவையான வகையில் நீதிமன்றத் தீர்ப்புகள் கிடைக்கும் எனக் கூறுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.22வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நீதிமன்றம் என்ன கூறப் போகிறது என்பதை அறிந்துகொள்ள நாட்டு மக்கள் காத்திருக்கின்ற நிலையில், நீதிமன்றம் தனது கருத்தை வெளியிடுவதற்கு முன்னரே ஜனாதிபதி மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படாது என அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.மக்கள் வாக்கெடுப்பு இன்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றி, அதன் பின்னர் தங்களுக்கு தேவையான வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் முயற்சிப்பதாகத் தோன்றுகிறது எனவும் ஜகத் குமார கூறினார்.இவ்வாறு ஜனாதிபதி முன்கூட்டியே கருத்து வெளியிடுவதன் மூலம் நீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதியின் கைகளில் இருப்பதாக ஒரு கருத்து மக்கள் மத்தியில் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அவ்வாறு கருத்து வெளியிடுவதற்கு ஜனாதிபதிக்கு எந்த உரிமையும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.நாட்டின் மக்கள் தங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண நீதிமன்றத்தை நாடுவது, நீதித்துறையின் சுயாதீனத்தன்மை மீது நம்பிக்கை வைத்தே ஆகும் எனவும், ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளைப் பார்க்கும்போது ஒருபுறம் ஜனநாயக உரிமைகளை வழங்குவது போன்று காட்டிக்கொண்டு, மறுபுறம் ஜனநாயகத்தின் அனைத்து உரிமைகளையும் கட்டுப்படுத்த முயற்சிப்பதாகத் தெரிகிறது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.தற்போது நாட்டில் தேர்தல் எதுவும் நடைபெறாத நிலையில் ஜனாதிபதி மக்கள் கூட்டங்களை நடத்த ஆரம்பித்திருப்பதாகவும் ஜகத் குமார குறிப்பிட்டார். இவ்வாறான அவசர மக்கள் சந்திப்புகள் மூலம் நீதித்துறைக்கு ஏதேனும் அழுத்தம் கொடுக்க முயற்சி செய்யப்படுகிறதா என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் தெரிவித்தார்.ஜனாதிபதி இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மக்களிடம் வந்து கூறக்கூடிய விடயம் என்ன என கேள்வி எழுப்பிய அவர், நாட்டை அபிவிருத்தி செய்தோம், மக்கள் மகிழ்ச்சியாக வாழக்கூடிய நாட்டை உருவாக்கினோம் அல்லது நாட்டை வளமான நாடாக மாற்றினோம் என அரசாங்கத்தால் கூற முடியாது என தெரிவித்தார்.எனினும், இந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வந்தர்களாகியுள்ளதாகவும், நாட்டின் மக்கள் மூன்று வேளை உணவு உண்பது மட்டுமல்லாது தற்போது இரண்டு வேளை உணவைக் கூட பெற்றுக்கொள்வதில் சிரமப்படுவதாகவும், பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அடுத்த ஜனாதிபதியாக வருவதற்காக நாட்டில் இல்லாத விடயங்களைப் பொய்யாகக் கூறி அரசாங்கம் முயற்சிப்பதாகவும் ஜகத் குமார தெரிவித்தார்.நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக ஆதாரபூர்வமான வழக்கு ஒன்று இருந்தால், நீதிமன்றத் தீர்ப்புக்கும் சட்ட நடவடிக்கைகளுக்கும் தலைவணங்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.நாமல் ராஜபக்ஷ எந்தத் தவறும் செய்யாதவர் என்பதால், எந்தவொரு நீதிமன்றத்திற்கும் எந்தவொரு ஆணைக்குழுவிற்கும் செல்ல அவர் ஒருபோதும் தயங்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.ஆனால் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் நிமல் பெரேரா என்ற நபரின் கூற்றை நம்பி, பணத்தைப் பெற்றதாகக் கூறப்படும் நபரை கைது செய்யாமல், அவரைக் கொண்டு பொய்யான தகவல்களை உருவாக்கி எதிர்க்கட்சித் தலைவர்களை வேட்டையாட முயற்சிக்கப்படுமானால், அது சட்டம் தொடர்பான பிரச்சினையாகும் எனவும் ஜகத் குமார குறிப்பிட்டார்.எனினும், நீதிமன்றத்தில் இந்த அனைத்து விடயங்கள் தொடர்பிலும் தங்களுடைய தரப்பு சரியானது என்பதை நிரூபிக்க முடியும் என தாங்கள் நம்புவதாகவும், ஆனால் பிணை வழங்கப்படாத வகையில் போலியான குற்றச்சாட்டுகளை உருவாக்க முயற்சிப்பதை தாங்கள் முழுமையாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.தங்களுக்கு எதிராக எத்தனை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும், செப்டெம்பர் 12ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டம் மிகவும் வெற்றிகரமாகவும் வலுவாகவும் நடத்தப்படும் எனவும், அந்தக் கூட்டத்தை எவராலும் தடுக்க முடியாது எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.மேலும், 22வது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக எதிர்க்கட்சியை முழுமையாக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைத்து, எதிர்வரும் தேர்தல்களை நடத்தாமல் இருப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றனவா என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் கூறினார்.அல்லது தேர்தல்கள் நடத்தப்பட்டாலும், அவை அரசாங்கத்திற்கு சாதகமான வகையில் நடைபெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்ற கேள்வியும் எழுவதாக அவர் தெரிவித்தார்.இதற்கு எதிராக எதிர்காலத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அனைத்து அரசியல் சக்திகளும் ஒன்றிணைந்து பாரிய மக்கள் இயக்கமொன்றை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement