• Jul 25 2026

குவைத்தை மீண்டும் அதிர வைத்த ஈரான்

Ziya / Jul 24th 2026, 3:44 pm
image

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில்,குவைத் மீது மீண்டும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.


ஈரானில் இருந்து வந்த ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை குவைத் வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்ததாக குவைத் ராணுவம் தெரிவித்துள்ளது.


ஜோர்டான், பஹ்ரைன் மற்றும் எர்பில் பகுதிகள் மீது ஏற்கனவே ஈரான் தாக்குதல்கள் நடாத்தியுள்ள நிலையில், தற்போது குவைத்தும் புதிய தாக்குதல் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது.


இதனிடையே, அமெரிக்கப் படைகள் பயன்படுத்தும் அலி அல் சலேம் விமானப்படைத் தளத்தை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.


இந்த சம்பவம் மத்திய கிழக்கில் நிலவும் இராணுவ பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.


 ஈரானில் இருந்து வரும் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை எதிர்கொள்ள குவைத் தனது வான் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

குவைத்தை மீண்டும் அதிர வைத்த ஈரான் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில்,குவைத் மீது மீண்டும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.ஈரானில் இருந்து வந்த ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை குவைத் வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்ததாக குவைத் ராணுவம் தெரிவித்துள்ளது.ஜோர்டான், பஹ்ரைன் மற்றும் எர்பில் பகுதிகள் மீது ஏற்கனவே ஈரான் தாக்குதல்கள் நடாத்தியுள்ள நிலையில், தற்போது குவைத்தும் புதிய தாக்குதல் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது.இதனிடையே, அமெரிக்கப் படைகள் பயன்படுத்தும் அலி அல் சலேம் விமானப்படைத் தளத்தை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.இந்த சம்பவம் மத்திய கிழக்கில் நிலவும் இராணுவ பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. ஈரானில் இருந்து வரும் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை எதிர்கொள்ள குவைத் தனது வான் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement