• Jul 24 2026

குற்ற விபரங்களை மறைத்தால் அமெரிக்க நுழைவுக்கு தடை! விண்ணப்பதாரர்களுக்கு கடும் எச்சரிக்கை

Chithra / Jul 23rd 2026, 11:17 am
image


அமெரிக்க விசா கோரி விண்ணப்பிப்போர் தங்களது குற்றப் பின்னணி மற்றும் சுயவிவரங்களை மறைக்கவோ அல்லது தவறான தகவல்களை வழங்கவோ கூடாது என கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கடுமையான எச்சரிப்பு விடுத்துள்ளது.


இதுதொடர்பாகத் தூதரகம் வெளியிட்டுள்ள பொது அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்:


மிகச் சிறிய அளவிலான குற்றச் செயல்களாக இருந்தாலும் அவை விசா நிராகரிக்கப்படுவதற்கு நேரடிச் காரணமாக அமையும்.


விண்ணப்பதாரர்களின் முழுமையான குற்றப் பின்னணி விபரங்கள் தூதரக அதிகாரிகளிடம் இருப்பதால், விண்ணப்பங்களின் போதும் நேர்காணல்களின் போதும் முழு உண்மையை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும்.


பொய்யான தகவல்களை வழங்குவது கண்டறியப்பட்டால், எதிர்காலத்தில் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு நிரந்தரத் தடை விதிக்கப்படக்கூடும்.


எனவே, விசா பெறும் முழுமையான நடைமுறை முழுவதும் விண்ணப்பதாரர்கள் முழுமையான நேர்மையைக் கடைப்பிடிக்குமாறு கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குற்ற விபரங்களை மறைத்தால் அமெரிக்க நுழைவுக்கு தடை விண்ணப்பதாரர்களுக்கு கடும் எச்சரிக்கை அமெரிக்க விசா கோரி விண்ணப்பிப்போர் தங்களது குற்றப் பின்னணி மற்றும் சுயவிவரங்களை மறைக்கவோ அல்லது தவறான தகவல்களை வழங்கவோ கூடாது என கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கடுமையான எச்சரிப்பு விடுத்துள்ளது.இதுதொடர்பாகத் தூதரகம் வெளியிட்டுள்ள பொது அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்:மிகச் சிறிய அளவிலான குற்றச் செயல்களாக இருந்தாலும் அவை விசா நிராகரிக்கப்படுவதற்கு நேரடிச் காரணமாக அமையும்.விண்ணப்பதாரர்களின் முழுமையான குற்றப் பின்னணி விபரங்கள் தூதரக அதிகாரிகளிடம் இருப்பதால், விண்ணப்பங்களின் போதும் நேர்காணல்களின் போதும் முழு உண்மையை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும்.பொய்யான தகவல்களை வழங்குவது கண்டறியப்பட்டால், எதிர்காலத்தில் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு நிரந்தரத் தடை விதிக்கப்படக்கூடும்.எனவே, விசா பெறும் முழுமையான நடைமுறை முழுவதும் விண்ணப்பதாரர்கள் முழுமையான நேர்மையைக் கடைப்பிடிக்குமாறு கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement