• Apr 23 2026

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய CID-யில் முன்னிலை...!samugammedia

Ziya / Feb 2nd 2024, 10:27 am
image

முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல இன்று(02)  காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்.

கெஹலிய ரம்புக்வெல்லவை இன்றையதினம் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் நேற்றையதினம்(01) உத்தரவிட்டது.

இந்நிலையிலேயே,  கெஹலிய ரம்புக்வெல்ல இன்று  குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்.

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்து தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.


முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய CID-யில் முன்னிலை.samugammedia முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல இன்று(02)  காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்.கெஹலிய ரம்புக்வெல்லவை இன்றையதினம் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் நேற்றையதினம்(01) உத்தரவிட்டது.இந்நிலையிலேயே,  கெஹலிய ரம்புக்வெல்ல இன்று  குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்.தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்து தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement