பண்டாரவளை மாநகர சபையின் முன்னாள் மேயர் ஜனக நிஷாந்த ரத்நாயக்க, பண்டாரவளை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (10) கைது செய்யப்பட்டுள்ளார்.
பண்டாரவளை மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி மற்றும் போலியான ஆவணங்களைத் தயாரித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்னர் இந்த சம்பவம் தொடர்பில் மாநகர சபையின் இரண்டு வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் தொடர்ச்சியாகவே முன்னாள் மேயர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மேயரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
நிதி மோசடி குற்றச்சாட்டு; பண்டாரவளை முன்னாள் மேயர் கைது பண்டாரவளை மாநகர சபையின் முன்னாள் மேயர் ஜனக நிஷாந்த ரத்நாயக்க, பண்டாரவளை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (10) கைது செய்யப்பட்டுள்ளார்.பண்டாரவளை மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி மற்றும் போலியான ஆவணங்களைத் தயாரித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சில மாதங்களுக்கு முன்னர் இந்த சம்பவம் தொடர்பில் மாநகர சபையின் இரண்டு வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் தொடர்ச்சியாகவே முன்னாள் மேயர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மேயரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.