• May 05 2026

மட்டக்களப்புக்குள் படையெடுக்கும் யானைகள்; தொடரும் அட்டகாசம்

Chithra / Feb 22nd 2026, 12:43 pm
image

 

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட மாந்தீவு பகுதிக்குள் ஏற்கனவே புகுந்திருந்த கட்டு யானைகள் இன்று  திருப்பந்துறை பிரதேசத்திற்குள் நுழைந்து அட்டகாசம் செய்துள்ளன.


கடந்த ஐந்து தினங்களாக தொடர்ந்து அப்பகுதியில் காட்டு யானைகள் உட்பகுந்து நெற்பயிர்கள் மற்றும் ஏனைய பயிர் வகைகளை  துவம்சம்  செய்வதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர்.


யானைகள் மனித மோதலுக்கு நிரந்தர தீர்வு இதுவரையில் எட்டப்படவில்லை என மக்கள்  கவலை தெரிவித்தனர்.


இதேவேளை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகஸ்த்தர்களும், அப்பகுதி மக்களும் இணைந்து குறித்த காட்டு யானைகளை அப்பகுதிகளிலிருந்து வெளியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


காட்டு யானைகள் அட்டகாசத்தால்  தமது அன்றாட செயற்பாடுகளில் ஈடுபட முடியதுள்ளதாகவும், மிகுந்த அச்சத்தில்  தாம் நடமாடுவதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர்.

மட்டக்களப்புக்குள் படையெடுக்கும் யானைகள்; தொடரும் அட்டகாசம்  மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட மாந்தீவு பகுதிக்குள் ஏற்கனவே புகுந்திருந்த கட்டு யானைகள் இன்று  திருப்பந்துறை பிரதேசத்திற்குள் நுழைந்து அட்டகாசம் செய்துள்ளன.கடந்த ஐந்து தினங்களாக தொடர்ந்து அப்பகுதியில் காட்டு யானைகள் உட்பகுந்து நெற்பயிர்கள் மற்றும் ஏனைய பயிர் வகைகளை  துவம்சம்  செய்வதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர்.யானைகள் மனித மோதலுக்கு நிரந்தர தீர்வு இதுவரையில் எட்டப்படவில்லை என மக்கள்  கவலை தெரிவித்தனர்.இதேவேளை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகஸ்த்தர்களும், அப்பகுதி மக்களும் இணைந்து குறித்த காட்டு யானைகளை அப்பகுதிகளிலிருந்து வெளியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.காட்டு யானைகள் அட்டகாசத்தால்  தமது அன்றாட செயற்பாடுகளில் ஈடுபட முடியதுள்ளதாகவும், மிகுந்த அச்சத்தில்  தாம் நடமாடுவதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement