உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் 8 ஆவது ஆண்டு நிறைவுக்கு முன்னர், அதனுடன் தொடர்புடைய அனைத்துச் சூழ்ச்சியாளர்களையும் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் இந்தத் தகவல்களை வெளிப்படுத்தினார்.
இதன்போது, தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரும், அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளருமான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, நீதிமன்ற உத்தரவிற்கமைய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
2018 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் திகதி வவுணதீவில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டமை மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர், 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி சாய்ந்தமருது பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பான விசாரணைகளைத் தவறாக வழிநடத்தியமை குறித்த இந்த வழக்கு, கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபராகத் தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சலேவை, நீதவான் பிறப்பித்த உத்தரவிற்கமைய குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, முறைப்பாட்டாளர் தரப்பு சார்பாக ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், விசாரணைகள் குறித்த மேலதிக அறிக்கை ஒன்றினை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நீதிமன்றிற்கு வழங்கப்பட்ட உறுதி உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் 8 ஆவது ஆண்டு நிறைவுக்கு முன்னர், அதனுடன் தொடர்புடைய அனைத்துச் சூழ்ச்சியாளர்களையும் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார். கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் இந்தத் தகவல்களை வெளிப்படுத்தினார். இதன்போது, தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரும், அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளருமான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, நீதிமன்ற உத்தரவிற்கமைய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 2018 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் திகதி வவுணதீவில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டமை மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர், 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி சாய்ந்தமருது பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பான விசாரணைகளைத் தவறாக வழிநடத்தியமை குறித்த இந்த வழக்கு, கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபராகத் தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சலேவை, நீதவான் பிறப்பித்த உத்தரவிற்கமைய குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதனைத் தொடர்ந்து, முறைப்பாட்டாளர் தரப்பு சார்பாக ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், விசாரணைகள் குறித்த மேலதிக அறிக்கை ஒன்றினை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.