• May 26 2026

3 வருடங்களின் பின் சிக்கிய இரட்டைக் கொலைச் சந்தேகநபர்!

dorin / May 26th 2026, 6:17 pm
image

இரண்டு வேறுபட்ட கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், எதிர்வரும் ஜூன் மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மூன்று வருடங்களுக்கும் மேலாகத் தேடப்பட்டு வந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை (24) மதுகம - வெலிகந்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர், ஞாயிற்றுக்கிழமை (25) லிந்துலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். 

அதன்பின்னர் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து, அவர் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதான மகேஷ் அசலங்க டி சொய்சா என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி, தலவாக்கலை - கிரேட் வெஸ்டன் மலையின் உச்சியில் பெண்ணொருவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலும், தலங்கம பொலிஸ் பிரிவில் 57 வயதான பெண்ணொருவர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலுமே இவர் தேடப்பட்டு வந்த முதன்மைச் சந்தேகநபராவார்.

மத்திய மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலின் கீழ், சந்தேகநபரின் தொலைபேசி இலக்கத்தின் மூலம் பெறப்பட்ட தரவுகள் மற்றும் இரகசியத் தகவல்களின் அடிப்படையிலேயே இந்தத் திட்டமிட்ட கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, லிந்துலை பொலிஸாரினால் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வந்த சந்தேகநபர், இன்று (26) நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதன் பின்னரே அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

குறித்த இரு கொலைச் சம்பவங்கள் தொடர்பிலும் லிந்துலை பொலிஸாரும் தலங்கம பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

3 வருடங்களின் பின் சிக்கிய இரட்டைக் கொலைச் சந்தேகநபர் இரண்டு வேறுபட்ட கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், எதிர்வரும் ஜூன் மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மூன்று வருடங்களுக்கும் மேலாகத் தேடப்பட்டு வந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த சனிக்கிழமை (24) மதுகம - வெலிகந்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர், ஞாயிற்றுக்கிழமை (25) லிந்துலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அதன்பின்னர் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து, அவர் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதான மகேஷ் அசலங்க டி சொய்சா என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.கடந்த 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி, தலவாக்கலை - கிரேட் வெஸ்டன் மலையின் உச்சியில் பெண்ணொருவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலும், தலங்கம பொலிஸ் பிரிவில் 57 வயதான பெண்ணொருவர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலுமே இவர் தேடப்பட்டு வந்த முதன்மைச் சந்தேகநபராவார்.மத்திய மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலின் கீழ், சந்தேகநபரின் தொலைபேசி இலக்கத்தின் மூலம் பெறப்பட்ட தரவுகள் மற்றும் இரகசியத் தகவல்களின் அடிப்படையிலேயே இந்தத் திட்டமிட்ட கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து, லிந்துலை பொலிஸாரினால் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வந்த சந்தேகநபர், இன்று (26) நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதன் பின்னரே அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.குறித்த இரு கொலைச் சம்பவங்கள் தொடர்பிலும் லிந்துலை பொலிஸாரும் தலங்கம பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement