• Jul 31 2026

அரசுக்கு ஒத்தூதும் அதிகாரிகளின் சூழ்ச்சியில் வீழ்ந்துவிட வேண்டாம்; வலிவடக்கு மீள் குடியேற்ற குழு எச்சரிக்கை!

Chithra / Jul 31st 2026, 2:50 pm
image


​மக்களின் கோரிக்கைக்கும் விருப்பங்களுக்கும் மாறாக, இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ள பூர்வீக நிலங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் சதி முயற்சியை அரசின் ஏவுதலுடன் சில அரச அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக வலிவடக்கு மீள் குடியேற்ற அபிவிருத்திக்குழு கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது.


​இந்த சதி முயற்சியின் ஒரு கட்டமாக, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதியன்று தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நஷ்ட ஈடு வழங்குவதற்கான கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இதற்காக, காணிகளை இழந்து தவிக்கும் மற்றும் எக்காலத்திலும் நஷ்ட ஈடு கோராத மக்களுக்கே பிரத்தியேகமாக கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


​இவ்வாறு அழைக்கப்படும் மக்களிடம் ஏதோ ஒரு வகையில் சம்மதத்தைப் பெற்று, அவர்களின் பூர்வீகக் காணிகளை நிரந்தரமாகக் கபளீகரம் செய்யவே இன்றைய அரசும் அதன் அதிகாரிகளும் தீவிரமாக முயற்சிக்கின்றனர் என்று அக்குழு எச்சரித்துள்ளது.

 

​இராணுவப் பிடிக்குள் இருக்கும் தமது சொந்த நிலங்களை நிபந்தனையின்றி விடுவிக்குமாறு கோரி மயிலிட்டி மக்கள் தொடர்ந்து 15 வாரங்களாகத் தொடர் அடையாளப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மக்களின் இந்த நியாயமான போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும் சதி வேலைகளிலேயே அரசு இறங்கியுள்ளது.


​எனினும், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் உறுதியாக நின்று போராடினால் மட்டுமே எமது காணி நிலங்களை வெற்றிகரமாக மீட்டெடுக்க முடியும் என்று ஏற்பாட்டுக் குழுவினர் வலுவாக வலியுறுத்தியுள்ளனர்.


மக்களின் காணிகளைச் சுவீகரிக்கத் துடிக்கும் அரசின் கோரிக்கைக்கு இணங்க, குறித்த கலந்துரையாடல் தினத்திற்கு முன்னர் எந்த வகையான நஷ்ட ஈடு, எந்தக் காலப்பகுதிக்குள் வழங்கப்படும் என்பது குறித்த தெளிவான உத்தரவாதத்தை அரசு எழுத்து மூலம் வழங்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.

அரசின் சூழ்ச்சி வலையில் சிக்கி, நஷ்ட ஈட்டிற்காக எமது பூர்வீகச் சொத்துக்களை இழந்துவிடாமல் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


அரசுக்கு ஒத்தூதும் அதிகாரிகளின் சூழ்ச்சியில் வீழ்ந்துவிட வேண்டாம்; வலிவடக்கு மீள் குடியேற்ற குழு எச்சரிக்கை ​மக்களின் கோரிக்கைக்கும் விருப்பங்களுக்கும் மாறாக, இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ள பூர்வீக நிலங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் சதி முயற்சியை அரசின் ஏவுதலுடன் சில அரச அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக வலிவடக்கு மீள் குடியேற்ற அபிவிருத்திக்குழு கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது.​இந்த சதி முயற்சியின் ஒரு கட்டமாக, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதியன்று தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நஷ்ட ஈடு வழங்குவதற்கான கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்காக, காணிகளை இழந்து தவிக்கும் மற்றும் எக்காலத்திலும் நஷ்ட ஈடு கோராத மக்களுக்கே பிரத்தியேகமாக கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.​இவ்வாறு அழைக்கப்படும் மக்களிடம் ஏதோ ஒரு வகையில் சம்மதத்தைப் பெற்று, அவர்களின் பூர்வீகக் காணிகளை நிரந்தரமாகக் கபளீகரம் செய்யவே இன்றைய அரசும் அதன் அதிகாரிகளும் தீவிரமாக முயற்சிக்கின்றனர் என்று அக்குழு எச்சரித்துள்ளது. ​இராணுவப் பிடிக்குள் இருக்கும் தமது சொந்த நிலங்களை நிபந்தனையின்றி விடுவிக்குமாறு கோரி மயிலிட்டி மக்கள் தொடர்ந்து 15 வாரங்களாகத் தொடர் அடையாளப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மக்களின் இந்த நியாயமான போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும் சதி வேலைகளிலேயே அரசு இறங்கியுள்ளது.​எனினும், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் உறுதியாக நின்று போராடினால் மட்டுமே எமது காணி நிலங்களை வெற்றிகரமாக மீட்டெடுக்க முடியும் என்று ஏற்பாட்டுக் குழுவினர் வலுவாக வலியுறுத்தியுள்ளனர்.மக்களின் காணிகளைச் சுவீகரிக்கத் துடிக்கும் அரசின் கோரிக்கைக்கு இணங்க, குறித்த கலந்துரையாடல் தினத்திற்கு முன்னர் எந்த வகையான நஷ்ட ஈடு, எந்தக் காலப்பகுதிக்குள் வழங்கப்படும் என்பது குறித்த தெளிவான உத்தரவாதத்தை அரசு எழுத்து மூலம் வழங்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.அரசின் சூழ்ச்சி வலையில் சிக்கி, நஷ்ட ஈட்டிற்காக எமது பூர்வீகச் சொத்துக்களை இழந்துவிடாமல் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement