இலங்கையின் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவியிலிருந்து பேராசிரியர் சுனில் சாந்தாவை நீக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) முடிவு செய்துள்ளது.
பல்கலைக்கழகத்தின் எதிர்கால செயல்பாடுகளுக்காக ஒரு புதிய நிர்வாகத் திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன தெரிவித்தார்.
எனினும், இந்த நீக்கத்திற்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் இந்த நீக்கம் குறித்து தனக்கு இதுவரை எந்தவித அறிவித்தலும் வழங்கப்படவில்லை என பேராசிரியர் சுனில் சாந்த குறிப்பிட்டார்.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை பதவி நீக்க தீர்மானம் இலங்கையின் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவியிலிருந்து பேராசிரியர் சுனில் சாந்தாவை நீக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) முடிவு செய்துள்ளது.பல்கலைக்கழகத்தின் எதிர்கால செயல்பாடுகளுக்காக ஒரு புதிய நிர்வாகத் திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன தெரிவித்தார்.எனினும், இந்த நீக்கத்திற்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.இந்நிலையில் இந்த நீக்கம் குறித்து தனக்கு இதுவரை எந்தவித அறிவித்தலும் வழங்கப்படவில்லை என பேராசிரியர் சுனில் சாந்த குறிப்பிட்டார்.