• May 19 2026

தொடர்ச்சியாக பொழியும் பனி ; யாழில் மக்கள் அவதி!

shanu / Dec 30th 2025, 6:43 pm
image

யாழ்ப்பாணத்தில் 24 மணிநேரமும் பனிப்பெய்து வருகிறது. இதனால் அசாதாரண காலநிலை நிலவுகிறது.


தொடர்ச்சியாக பனிப்பெய்து வருவதால் அன்றாட கடமைகளை மக்கள் கஷ்டத்தின் மத்தியில் முன்னெடுத்து வருகின்றனர்.


தொடர்ச்சியான பனி காரணமாக தடிமல், இருமல், சளி போன்ற நோய்களாலும் மக்கள் அவஸ்தை படுவதை அவதானிக்க முடிகின்றது. 


நாட்டில் அண்மையில் ஏற்பட்ட டித்வா புயல் காரணமாக பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டது. அந்த அனர்த்தத்திலிருந்து இன்றுவரையில் மக்கள் பெரும் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக பொழியும் பனி ; யாழில் மக்கள் அவதி யாழ்ப்பாணத்தில் 24 மணிநேரமும் பனிப்பெய்து வருகிறது. இதனால் அசாதாரண காலநிலை நிலவுகிறது.தொடர்ச்சியாக பனிப்பெய்து வருவதால் அன்றாட கடமைகளை மக்கள் கஷ்டத்தின் மத்தியில் முன்னெடுத்து வருகின்றனர்.தொடர்ச்சியான பனி காரணமாக தடிமல், இருமல், சளி போன்ற நோய்களாலும் மக்கள் அவஸ்தை படுவதை அவதானிக்க முடிகின்றது. நாட்டில் அண்மையில் ஏற்பட்ட டித்வா புயல் காரணமாக பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டது. அந்த அனர்த்தத்திலிருந்து இன்றுவரையில் மக்கள் பெரும் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement