சீனாவில் கருத்தடை சாதனங்களுக்கு வரி விதிப்பு சீனாவில் குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் நோக்கில் கருத்தடை சாதனங்கள், மாத்திரைகள் போன்றவற்றுக்கு அரசாங்கம் 13 சதவீதம் வரி விதித்துள்ளது.உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் சுமார் 140 கோடி பேர் வசிக்கின்றனர். இதனை கட்டுப்படுத்த கடந்த 1994ஆம் ஆண்டு ஒரு குழந்தை கொள்கையை சீன அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.இதனால் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து முதியோர் சனத்தொகை உயர்ந்தது. இது சமூக, பொருளாதார பிரச்சனைக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.இதனையடுத்து ஒரு குழந்தை கொள்கைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. ஆனால் அங்குள்ள மக்கள் தற்போது ஒரு குழந்தை முறைக்கு பழகி விட்டனர். இதனால் கடந்த ஆண்டு 10 கோடிக்கும் குறைவான குழந்தைகளே அங்கு பிறந்துள்ளன.இந்தநிலையில் குழந்தை பிறப்பை ஊக்குவிக்க தற்போது கருத்தடை சாதனங்கள், மாத்திரைகள் போன்றவற்றுக்கு அரசாங்கம் 13 சதவீதம் வரி விதித்துள்ளது.