• Aug 30 2026

நெல் உமிக்குள் மறைத்து பாலை மரக்குற்றிகளை கடத்த முயற்சி – தர்மபுரத்தில் பாரவூர்தி மீட்பு

Chithra / Aug 29th 2026, 3:57 pm
image


கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில், பாலை மரக்குற்றிகளை நெல் உமிக்குள் சூட்சுமமாக மறைத்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லத் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.


பொலிஸாருக்கு நேற்று (28) பிற்பகல் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போதே இந்த கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.


இதன்போது, 15 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான பாலை மரக்குற்றிகள் நெல் உமிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பாரவூர்தி மற்றும் மரக்குற்றிகளை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நெல் உமிக்குள் மறைத்து பாலை மரக்குற்றிகளை கடத்த முயற்சி – தர்மபுரத்தில் பாரவூர்தி மீட்பு கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில், பாலை மரக்குற்றிகளை நெல் உமிக்குள் சூட்சுமமாக மறைத்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லத் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.பொலிஸாருக்கு நேற்று (28) பிற்பகல் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போதே இந்த கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.இதன்போது, 15 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான பாலை மரக்குற்றிகள் நெல் உமிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பாரவூர்தி மற்றும் மரக்குற்றிகளை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement