• May 19 2026

டித்வா சேதங்களை மீள் கட்டியெழுப்ப மேலும் 450 மில்லியன் டொலர்கள் - ஜெய்சங்கர் உறுதி!

shanu / Dec 23rd 2025, 11:52 am
image

டிட்வா புயலால் இலங்கையில் சேதமடைந்த பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்ப இந்தியா 450 மில்லியன் அமெரிக்க  டொலர்களை வழங்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார். 


நாட்டிற்கு வருகை தந்த இந்திய அமைச்சர், கொழும்பில் இன்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்துடன் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது  இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், 


இலங்கையில் சேதமடைந்த பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்ப இந்தியா 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும். இதில் 350 மில்லியன் ரூபா சலுகை கடன் வரிகளும், 100 மில்லியன் அமெரிக்க டொலர் மானியங்களும் அடங்கும். 


ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் இலங்கையில் டிட்வா புயலால் ஏற்பட்ட சேதம் குறித்து விரிவான கலந்துரையாடல் நடத்தப்பட்டது. 


“பிரதமர் நரேந்திர மோடியின் கடிதம் எங்கள் முதல் பதிலளிப்புப் பங்கை அடிப்படையாகக் கொண்டது.  இலங்கைக்கு 450 மில்லியன் அமெரிக்க டொலர் மறுசீரமைப்பு தொகுப்பை உறுதி செய்கிறது. இந்த உறுதிமொழியை எவ்வளவு விரைவாக வழங்க முடியும் என்பதை மையமாகக் கொண்டது எங்கள் பேச்சுவார்த்தைகள். 


இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடான இலங்கை, பொருளாதார நெருக்கடியைப் போன்ற ஒரு நெருக்கடியை எதிர்கொண்ட நேரத்தில் இந்தியா முன்னேறியது  என்று தெரிவித்துள்ளார்.

டித்வா சேதங்களை மீள் கட்டியெழுப்ப மேலும் 450 மில்லியன் டொலர்கள் - ஜெய்சங்கர் உறுதி டிட்வா புயலால் இலங்கையில் சேதமடைந்த பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்ப இந்தியா 450 மில்லியன் அமெரிக்க  டொலர்களை வழங்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார். நாட்டிற்கு வருகை தந்த இந்திய அமைச்சர், கொழும்பில் இன்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்துடன் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது  இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் சேதமடைந்த பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்ப இந்தியா 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும். இதில் 350 மில்லியன் ரூபா சலுகை கடன் வரிகளும், 100 மில்லியன் அமெரிக்க டொலர் மானியங்களும் அடங்கும். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் இலங்கையில் டிட்வா புயலால் ஏற்பட்ட சேதம் குறித்து விரிவான கலந்துரையாடல் நடத்தப்பட்டது. “பிரதமர் நரேந்திர மோடியின் கடிதம் எங்கள் முதல் பதிலளிப்புப் பங்கை அடிப்படையாகக் கொண்டது.  இலங்கைக்கு 450 மில்லியன் அமெரிக்க டொலர் மறுசீரமைப்பு தொகுப்பை உறுதி செய்கிறது. இந்த உறுதிமொழியை எவ்வளவு விரைவாக வழங்க முடியும் என்பதை மையமாகக் கொண்டது எங்கள் பேச்சுவார்த்தைகள். இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடான இலங்கை, பொருளாதார நெருக்கடியைப் போன்ற ஒரு நெருக்கடியை எதிர்கொண்ட நேரத்தில் இந்தியா முன்னேறியது  என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement