• Apr 30 2026

மாரத்தான் ஓட்டத்திற்கு தயாரான மாணவன் மயங்கி விழுந்து பலி

Chithra / Mar 11th 2026, 1:32 pm
image

 


பாடசாலையின் இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டியின் மாரத்தான் ஓட்டத்திற்காக ஏனைய மாணவர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மாணவர் ஒருவர், ஓடிக்கொண்டிருந்த போதே கீழே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக புத்தல பொலிஸார் தெரிவித்தனர்.


இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை (11) காலை இடம்பெற்றுள்ளது. 


புத்தல - படல்கும்புரை வீதி, வெஹெர கொட போகஹஎல்ல பகுதியைச் சேர்ந்த, புத்தல துட்ட கெமுனு தேசிய பாடசாலையில் 12ஆம் வகுப்பில் கல்வி பயிலும் டி.எம். மலீஷ சந்தகெலும் என்ற 15 வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


குறித்த மாணவர் ஏனைய மாணவர்களுடன் புத்தல - படல்கும்புரை வீதியில் கடுகஹகொலனிய குளம் அருகே ஓடிக்கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.


உடனடியாக புத்தல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.


இச்சம்பவம் தொடர்பில் புத்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


மாரத்தான் ஓட்டத்திற்கு தயாரான மாணவன் மயங்கி விழுந்து பலி  பாடசாலையின் இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டியின் மாரத்தான் ஓட்டத்திற்காக ஏனைய மாணவர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மாணவர் ஒருவர், ஓடிக்கொண்டிருந்த போதே கீழே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக புத்தல பொலிஸார் தெரிவித்தனர்.இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை (11) காலை இடம்பெற்றுள்ளது. புத்தல - படல்கும்புரை வீதி, வெஹெர கொட போகஹஎல்ல பகுதியைச் சேர்ந்த, புத்தல துட்ட கெமுனு தேசிய பாடசாலையில் 12ஆம் வகுப்பில் கல்வி பயிலும் டி.எம். மலீஷ சந்தகெலும் என்ற 15 வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த மாணவர் ஏனைய மாணவர்களுடன் புத்தல - படல்கும்புரை வீதியில் கடுகஹகொலனிய குளம் அருகே ஓடிக்கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.உடனடியாக புத்தல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் தொடர்பில் புத்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement