• Apr 27 2026

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் சிறப்புற இடம்பெற்ற புத்தரிசி விழா!

shanu / Mar 23rd 2026, 6:08 pm
image

முல்லைத்தீவு மாவட்டத்திற்கான 2026ஆம் ஆண்டுக்கான புத்தரிசி விழா இன்றையதினம் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில்  மிக சிறப்புற இடம்பெற்றிருந்தது.


முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் பிரான்சிஸ் கனியூட், தலமையில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் ஆரம்பமாகி ஆலயத்தில் பொங்கல் வழிபாடுகள் இடம்பெற்று கறியமுதம் பரிமாறி 2026 ஆம் ஆண்டுக்கான புத்தரிசி தினம் சிறப்பாக இன்றையதினம் (23.03.2026) கண்ணகி ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.


வன்னிமாவட்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் ,முல்லைத்தீவு மாவட்ட பிரதேசசபை தவிசாளர்கள், மாவட்ட அரசாங்க அதிபர், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், விவசாய திணைக்களம், நீர்பாசன திணைக்களத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட விவசாய திணைக்கள பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்ட  ஒருங்கிணைப்பு தலைவரும் கூட்டுறவு பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க, கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் திருமதி இமக்குலேற்றா புஷ்பானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்திருந்தார்கள்.


வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் சிறப்புற இடம்பெற்ற புத்தரிசி விழா முல்லைத்தீவு மாவட்டத்திற்கான 2026ஆம் ஆண்டுக்கான புத்தரிசி விழா இன்றையதினம் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில்  மிக சிறப்புற இடம்பெற்றிருந்தது.முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் பிரான்சிஸ் கனியூட், தலமையில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் ஆரம்பமாகி ஆலயத்தில் பொங்கல் வழிபாடுகள் இடம்பெற்று கறியமுதம் பரிமாறி 2026 ஆம் ஆண்டுக்கான புத்தரிசி தினம் சிறப்பாக இன்றையதினம் (23.03.2026) கண்ணகி ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.வன்னிமாவட்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் ,முல்லைத்தீவு மாவட்ட பிரதேசசபை தவிசாளர்கள், மாவட்ட அரசாங்க அதிபர், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், விவசாய திணைக்களம், நீர்பாசன திணைக்களத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட விவசாய திணைக்கள பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்ட  ஒருங்கிணைப்பு தலைவரும் கூட்டுறவு பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க, கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் திருமதி இமக்குலேற்றா புஷ்பானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்திருந்தார்கள்.

Advertisement

Advertisement

Advertisement