நாடளாவிய ரீதியில் நேற்று (25) நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரிலும், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாகவும் மொத்தம் 717 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 27,932 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 28 நபர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
மேலும் பிடியாணை உத்தரவு நிலுவையில் உள்ள 246 சந்தேக நபர்கள், திறந்த பிடியாணை உத்தரவின் கீழ் 166 பேர் கைது செய்யப்பட்டனர்.
அறிக்கையின்படி, மொத்தம் 32 பேர் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டிலும் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியதற்காக 23 பேர், போக்குவரத்து குற்றங்களை மீறிய 3,747 பேர் கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள், குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருப்பவர்களைக் கைது செய்ய நாடு முழுவதும் விசேட பொலிஸ் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
விசேட பொலிஸ் நடவடிக்கையில் ஒரேநாளில் 717 பேர் கைது நாடளாவிய ரீதியில் நேற்று (25) நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரிலும், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாகவும் மொத்தம் 717 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 27,932 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 28 நபர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.மேலும் பிடியாணை உத்தரவு நிலுவையில் உள்ள 246 சந்தேக நபர்கள், திறந்த பிடியாணை உத்தரவின் கீழ் 166 பேர் கைது செய்யப்பட்டனர்.அறிக்கையின்படி, மொத்தம் 32 பேர் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டிலும் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியதற்காக 23 பேர், போக்குவரத்து குற்றங்களை மீறிய 3,747 பேர் கைது செய்யப்பட்டனர்.போதைப்பொருள் கடத்தல்காரர்கள், குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருப்பவர்களைக் கைது செய்ய நாடு முழுவதும் விசேட பொலிஸ் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.