• May 17 2026

மியன்மார் சைபர் குற்றக் குழுவிடமிருந்து 6 இலங்கையர்கள் மீட்பு

Chithra / Oct 24th 2025, 2:25 pm
image

 

மியன்மாரில் சைபர் கிரைம் குற்றக் குழுவால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு இலங்கையர்கள் மீட்கப்பட்டு, தற்போது அந்த நாட்டு இராணுவப் படைகளின் பாதுகாப்பில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விடயத்தை மியன்மாரில் உள்ள இலங்கைத் தூதரகம் உறுதி செய்துள்ளது. 

மீட்கப்பட்ட 06 இலங்கையர்களும் பாதுகாப்பாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தாய்லாந்துக்கு அருகிலுள்ள மியன்மாரின் எல்லைப் பகுதியில் சைபர் கிரைம் நடவடிக்கைகளில் வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு வருகிறது. 

இந்த குழுவிடம் சிக்கிக்கொண்ட இலங்கையர்களை விடுவிப்பதற்குத் தொடர்ச்சியான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. 

இந்தப் பகுதியில் குறைந்தது 17 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

தொழில் வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறியே அவர்கள், சுற்றுலா விசாவில் மியன்மாருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


மியன்மார் சைபர் குற்றக் குழுவிடமிருந்து 6 இலங்கையர்கள் மீட்பு  மியன்மாரில் சைபர் கிரைம் குற்றக் குழுவால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு இலங்கையர்கள் மீட்கப்பட்டு, தற்போது அந்த நாட்டு இராணுவப் படைகளின் பாதுகாப்பில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை மியன்மாரில் உள்ள இலங்கைத் தூதரகம் உறுதி செய்துள்ளது. மீட்கப்பட்ட 06 இலங்கையர்களும் பாதுகாப்பாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்துக்கு அருகிலுள்ள மியன்மாரின் எல்லைப் பகுதியில் சைபர் கிரைம் நடவடிக்கைகளில் வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த குழுவிடம் சிக்கிக்கொண்ட இலங்கையர்களை விடுவிப்பதற்குத் தொடர்ச்சியான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்தப் பகுதியில் குறைந்தது 17 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தொழில் வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறியே அவர்கள், சுற்றுலா விசாவில் மியன்மாருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement